திங்கள், 3 ஆகஸ்ட், 2009

முரளி ஒய்வு ஏன்



All good things must come to end at some point என்று சொல்லப்படுவதை அறிந்திருப்பீர்கள். ஆனாலும் அவ்வாறன முடிவுகளை சீரணித்துக் கொள்வதென்பது மிகுந்த சிரமமான காரியமாகும். அவ்வகையில் சடுதியான முடிவுகளால் அதிர்வுற்று அவற்றை ஏற்க தயங்குபவரை தயார் படுத்தவோ என்னவோ முன்கூட்டியே தன ஒய்வு முடிவை வெளியிட்டிருக்கிறார் இலங்கயின் சுழற்பந்து நட்ச்சத்திரம் முரளி

முரளி என்ற பெயர் கிரிக்கெட் ரசிகர்களுக்கு புதிதாய் அறிமுகப்படுத்த வேண்டிய பெயரில்லை. டெஸ்ட் போட்டிகளில் 10 விக்கெட்டுகள் எடுக்கப்படுவதெல்லாம் பெரும் சாதனைகளாகக் கருதப்பட்ட காலத்தில் முரளி இதை அவரது வழமையாய் கொண்டவர். 92 இல அறிமுகமானவர் 95 ற்கு பிறகு சாதனைகள் நிகழ்த்தவெனவே கிரிக்கெட் ஆடியவர். இவருக்கு இணையான புறச்சூழல் பந்து வீச்சாளர் இதுவரை தோன்றியதில்லை எனக் கூறினால் அது மிகையில்லை.

இந்த சாதனையாளர் டெஸ்ட் போட்டிகளில் முதற்றடவையாக 1000 விக்கெட்டுகள் பெறப்பட்ட சாதனையை நிகழ்த்துவார் என எதிர்பார்த்திருக்கையில்தான் முரளியிடமிருந்து வந்திருக்கிறது இந்த செய்தி. யாரும் எதிர்பாராத இந்த நேரத்தில் ஏன் முரளி இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கக் கூடும்.

உண்மையாகவே முரளி கூறுவதை போல அவர் ஒய்வு பெற பொருத்தமான வயதை அடைந்திருப்பதாலா?

அல்லது முரளியின் துணையின்றி இலங்கை அணி போட்டிகளை வெல்லக் கூடிய நிலையை அடைந்திருக்கக் கூடிய திருப்தியினாலா?

மென்டிஸ், ஹேரத் போன்ற புதுப் புயல்களின் வருகை எதிர்காலத்தில் தன்னை அணியிலுருந்து ஓரங்கட்டக்கூடிய நிலைமையை உருவாக்கக் கூடிய சாத்தியதினாலா?

அல்லது 20twenty போன்ற பணக்கொழிக்கும் போட்டிகளால் டெஸ்ட் போட்டிகளின் எண்ணிக்கை குறைவடைந்து தனது இலக்கான 1000 விக்கெட்டுகள் என்ற சாதனையை அடைய மேலும் காலம் நீடிக்கும் என்பதை உணர்ந்ததால் எடுத்த யதார்த்த பூர்வமான முடிவா?

அல்லது முரளி இங்கிலாந்திலோ இந்தியாவிலோ திரைமறைவில் மேற்கொண்டிருக்கக்கூடிய ஏதேனும் வியாபார ரீதியிலான பேரங்களின் அடிப்படையிலானதா?

எதுவாயிருந்தாலும் இன்னமும் ஒரு வருடத்தில் இம்முடிவு மறு பரிசீலனை செய்யப் படும் வாய்ப்பு உள்ளதாகவே கருத வேண்டியுள்ளது.


ஒன்று கவனித்தீர்களா shane warne தும்மினாலும் செய்தியாக்கும் மேற்கத்தைய ஊடகங்கள் இந்த அசாத்திய திறமையாளனின் முடிவைப் பற்றி அத்தனை தூரம் அலட்டிக் கொள்ளவில்லை.
Related Posts with Thumbnails