இதற்கு முன் ஒரு
படத்தை இத்தனைக் கஷ்டப்பட்டு பார்த்ததில்லை. காலை 10.30 காட்சிக்கு போனால் house
full போர்ட் போட்டு விட்டார்கள். சரி வீட்டுக்கு போகலாம் என்று நினைத்த வேளையில் சனீஸ்வரன்
நண்பர்கள் ரூபத்தில் விளையாட ஆரம்பித்தான். அடுத்த காட்சியை பார்த்து விட்டு போகலாமென்ற
வற்புறுத்தலுக்காக நின்றால் அடுத்த காட்சி நேரத்திலும் நம்மவருக்கே உரிய தள்ளு முள்ளுகளால்
நான் மாத்திரம் உள்ளே செல்ல நண்பர்கள் வெளியே ஒருவருக்கு ஒரு டிக்கெட் மட்டுமே என்பது
தியேட்டர் ரூல் என்பதால் புலம்ப கூட பக்கத்தில் ஆள் இல்லாமல் தலையைலடித்துக் கொண்டே
படத்தைப் பார்த்தேன்.
முருகதாஸில் எனக்கு
எப்போதும் பெரிய அபிப்பிராயம் கிடையாது. தீனா ஒரு மொக்கை, ரமணா கேப்டன் படங்களில் ஏதோ
சொல்லிக் கொள்ளும் படியான படம். கஜினி மெமெண்டோவின் ஒரு மலினமான பதிப்பு.
யோசித்து
பாருங்கள் மெமெண்டோ பார்த்த பின் லெனார்டின் மனைவியைக் கொன்ற ஜோன் ஜி யார்? நட்டாலியின்
காதலனா? இல்லை ஏற்கனவே டெடியுடன் சேர்ந்து கொன்றதாக ஒருவனை சொல்கிறார்களே அவனா? சரி
லெனார்டின் மனைவி இன்சூலின் அதிகமாக செலுத்தப்பட்டதால் செத்திருந்தால் டெடி அவனை வைத்து
ஏன் அவர்களை போட்டுத் தள்ள வேண்டும். ஜோன் ஜியைக் கொல்ல முன் அவன் சேமி பற்றி சொல்வான், அப்படியானால் லெனார்டுக்கு
ஏலவே அவனோடு பழக்கமுண்டா? என பல கேள்விகள் விரியும். ஆனால் அப்படி ஒரு படத்தை ரொம்ப
சீப்பா காதலியைக் கொன்றவனை அடிக்கடி நினைவு தப்பி போகின்றவன் பலி வாங்குகின்றான் அவ்வளவுதான்
என்ற ரீதியில் எடுக்கிறாரென்றால் தமிழ் ரசிகர்களை அவர் எவ்வளவு கேவலமாக எடைப் போட்டிருக்கிறார்.
படத்தில் சஞ்சய் ராமசாமி,கல்பனா என்ற பாத்திரங்களில் சூர்யா,அசின் இருவரினதும் அட்டகாசமான
நடிப்பில் வந்த சுவாரஸியமான காதல் காட்சிகளை தவிர்த்து படத்தை கொஞ்சம் யோசித்து பாருங்கள்.
சை ஃபை, ஃபேண்டசி
படங்களில் லோஜிக் இல்லாமல் இருக்கலாம் பிரச்சினையில்லை. இன்செப்ஷனில் எல்லோரும் மருந்தேற்றிக்
கொண்டு கனவுகளில் மூழ்கிப் போவதையும், ப்ரஸ்டீஜில் மனிதனைப் பிரதியெடுக்கும் டெஸ்லா
செய்த மெஷினையும் லோஜிக் பார்க்காமல் ஏற்றுக் கொண்டால் படத்தில் சுவாரஸியத்திற்கு குறைவில்லை.
சரி அப்படிப் பார்த்தால் ஊசி மருந்து அடிச்சி ஒருத்தர்ட ஜீனோமயே மாற்றி அவரோட பரம்பரையில
ஒருத்தர் எப்பையோ கற்ற வித்தைகளை எல்லாம் உடம்பில் ஆவி புகுந்தது போல வரப் பண்றீங்க.
நம்பித் தொலைக்கிறோம் அதை சுவாரஸியமாக கோர்வையாக சொல்ல வேண்டாமா?
முருகதாஸை வாயில்லா
விட்டால் நாய் தூக்கிக் கொண்டு போயிருக்கும். ஹோலிவுட் காரனே காப்பியடிக்க கூடிய அளவுக்கு
கதை பண்ணக் கிளம்பியவர் அப்படியெல்லாம் ஒண்ணும் புடுங்கல. ஃபர்ஸ்ட் ஹாஃப கலகலப்பா கொண்டு
போவோம். செகண்ட் ஹாஃப்ல சேஸிங், எக்ஷன்ன்னு ஏதாவது விறு விறுப்பா பண்ணுவோம்னு முடிவு
பண்ணி வழமையான தமிழ் சினிமாக்களின் மசாலா ஃபார்முலாவில் காட்சிகளை பிரதியிட்டிருக்கிறார்.
காட்சிகள் வழமையானதாகவும், சில்லியாகவும், சுவாரஸியமற்றும் இருப்பதால் படம் தலைவலியை
உண்டு பண்ணுகிறது.
இவர ரொம்ப கலைத்துவமா
எல்லாம் படம் எடுக்க சொல்லல. இந்த மாதிரி டெக்னிக்கல் வித்தை காட்டுகிற ஷங்கரைப் பாருங்கள்.
ஒரே கதைய திரும்ப திரும்ப எடுத்தாலும் ஒவ்வொரு ஷாட்டும் புதுசா இருக்குல்ல. அப்புறம்
சொல்ல வந்ததை சிம்பளா பிரச்சினை இல்லாம சொல்லி முடிக்கிறாறில்ல. மயக்கம் என்ன, வேலாயுதம்
ஏன் ஒஸ்தி அளவுக்கு கூட பாட்டுகள் இல்லை என்று பார்த்தால் தியேட்டரில் நிம்மதியாக தூங்கவும்
விடாமல் பின்னணி இசை ஒரே இரைச்சல். சூர்யா, வில்லன், ஸ்ருதி மூன்று பேரையும் குறை சொல்லக்
கூடாது நல்லா நடிச்சிருக்காங்க. ரவி கே. சந்திரன் ஒகே ஆனால் இந்த மனுசண்ட ப்ளெக், பஹேலி,
சவாரியா, ஆயுத எழுத்து, கன்னத்தில் முத்தமிட்டால் எல்லாம் யோசித்தால் இதுல ஒண்ணுமே
இல்லை.
இப்படி தெரிஞ்சிருந்தா
பேசாம வேலாயுதம் போய் சிரிச்சு பார்த்து இருப்பேன். இல்லன்னா ரா 1 போய் தலைவர் வர்ற
சீனுக்கு விசில் அடித்திருப்பேன். இல்லாட்டி வீட்டிலேயே உக்காந்து பணியாரம் சாப்பிட்டிருப்பேன்.
அதெல்லாம் விட்டுட்டு இதை ஒரு படம்னு பார்த்து. முருகதாஸிடம் ஒரே ஒரு விண்ணப்பம் இனி
மேல் படம் எடுங்க ஆனா ஒவரா பேசாதிங்க.
16 கருத்துகள்:
:)
bro correct uh sonninga...romba too much uh va vaadai ya pottaru..
mm thanks boss
hi friend need velayutham vimarsanam
:-)
super appu :)
Wright said boss. They have create over expectation but it's not up to mark
:))
இல்லன்னா ரா 1 போய் தலைவர் வர்ற சீனுக்கு விசில் அடித்திருப்பேன். "
அருமையா சொன்னீங்க..
//இல்லன்னா ரா 1 போய் தலைவர் வர்ற சீனுக்கு விசில் அடித்திருப்பேன்.//
darshan, i tried that only and even anga poi periya mokka vaanginen.........
ra one suthama ukkaara mudiyala.. atleast thalaivar scene mattumaavathu nalla irukkumnu paatha athaiyum keduthu vachu irukaan intha sharukh... athu rajini mathiriye illa makeup suthamaa sari illa.. motha padam atha vida mokka....
no thinking at all... its a mindless crap movie.. u luckily escaped........
Thanks
super boss...velayutham mega hit....
>>இதை ஒரு படம்னு பார்த்து. முருகதாஸிடம் ஒரே ஒரு விண்ணப்பம் இனி மேல் படம் எடுங்க ஆனா ஒவரா பேசாதிங்க.
haa haa கலக்கல் கமெண்ட்
:-)
very nice songs...7m Arivu.....good Picture
padam over mokkai. they try to make money using the word thamizhan.message is correct but messengers are wrong. it remembers me one of the mokkai film paramasivan by vasu.. screen play is very poor and how many days hero will get love in first loook.
கருத்துரையிடுக