சனி, 21 பிப்ரவரி, 2009

அம்மா தமிழனக் காப்பாத்தும்மா



நம்மவர்களில் எனக்கு எப்போதும் கோபம் அதிகம் இருப்பதுண்டு.
ரோம் பற்றி எரியும் போது நீரோ மன்னன் பிடில் வாசித்தானாம் அதை மிஞ்சுவதற்கு நம்மவரை விட்டால் ஆளில்லை.
அதனால் வந்த நியாயமான ஆதங்கம் என் கோபம்
மலையகத்தின் லயத்துக் காம்பராக்களில் மண்ணெண்ணெய் விலைக் கருதி படிப்பதைத் தவிர்த்து நேரத்தோடு படுக்கைக்கு செல்லும் பிள்ளைகள் மத்தியில்
ஈழத்தில் எம் சொந்தங்கள் செத்துக் கொண்டிருக்கும் நிலையில்


மின் வெளிச்சத்தில் ஜெகஜ் ஜோதியாக அம்மன் அருள் பாலிக்கிறராம்.


தமிழனின் நிலைக் கண்டு முத்துக் குமார்கள் நெருப்புக்கு தம்மை தின்னக் கொடுத்து தம்மையே எரித்துக்கொள்ளும் போது இப்படியும் ஒரு கூட்டம் தம் நிலை மறந்து ஆன்மீக அபத்தங்களில் சிக்கித் திளைக்கிறது.

பாவம் பெரியார் தான் தன் காலத்திற்குள்ளேயே நிறைய செய்து விட்டதாய் நினைத்திருப்பார்
ம்ஹ்ம்... விவேக் சொல்வது போல " டேய் ஒங்கள எல்லாம் இன்னும் ஹண்ட்ரட் பெரியார் வந்தாலும் திருத்த முடியாதுடா................"

5 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

//டேய் ஒங்கள எல்லாம் இன்னும் ஹண்ட்ரட் பெரியார் வந்தாலும் திருத்த முடியாதுடா// கண்டிப்பாக.நீங்கள் சொல்வது சரிதான். "கடவுள் இல்லை என்ற பிரச்சார கல்லுக்கு மாலையிட்டு வணங்கினான் சாலையோரத் தமிழன்".எங்கேயோ படித்தது. - எதற்காக வைக்கப்பட்டது என்பதுபற்றிக் கூட கவலைப்படாமல்(கவனிக்காமல்)தன் கடமையை செவ்வனே தமிழன்.
http://muzhangu.wordpress.com/

kuma36 சொன்னது…

:):)

தர்ஷன் சொன்னது…

இனியன் தங்கள் பின்னூட்டம் நிறையவே ஊக்கம் அளிக்கிறது

தர்ஷன் சொன்னது…

என்ன கலை உங்கள் பதிவுகளின் மூலம் நீங்கள் நிறைய இறைபக்தி உள்ளவர் என அறிகிறேன்
மேற்படி பதிவினால் மனம் வருந்தியிருந்தால் மன்னியுங்கள்.

கார்க்கிபவா சொன்னது…

/ " டேய் ஒங்கள எல்லாம் இன்னும் ஹண்ட்ரட் பெரியார் வந்தாலும் திருத்த முடியாதுடா................"/

உண்மைதான்

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails