சனி, 29 மே, 2010

டேய் என்னை அனத்த விடுங்கடா 3


தயவு செய்து நீ வாய் வைத்து
அருந்திய போத்தலில்
எனக்கு தண்ணீர் தராதே
இத்தனை தித்திப்பாய்
நான் டீ கூட குடிப்பதில்லை

இரண்டு நிறுத்தங்கள்
தாண்டிய பின் பேரூந்திலிருந்து
இறங்குகிறேன்
உன் நினைவுகள்
தடைப்பட்டு விடாமல்

கணநேர தனிமையையும்
நீதான் நிரப்புகிறாய்
உன் நினைவுகளால்
அதற்காக கழிப்பறைக்குள்ளுமா
மணிக்கணக்காய் அமரச்செய்வது

2 கருத்துகள்:

movithan சொன்னது…

//தயவு செய்து நீ வாய் வைத்து
அருந்திய போத்தலில்
எனக்கு தண்ணீர் தராதே//
ரசித்தேன்

தர்ஷன் சொன்னது…

நன்றி மால்குடி

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails