ஞாயிறு, 29 மார்ச், 2009

பட்டாம்பூச்சி என் தோட்டத்திலும்


"ஊக்குவிக்க ஆள் இருந்தால் ஊக்கு விப்பவனும் தேக்கு விப்பான்" என்று சொல்வார்கள். பாடசாலைக் காலங்களிலேயே எழுத்தார்வம் இருந்தாலும் பெரிதாக அந்த முயற்சிகளில் ஈடுபடவில்லை. பலரிடம் எழுத்துக்களை கொண்டு சேர்க்க வழியில்லை. பார்ப்போரும் பெரிதாய் கருத்து சொல்வதில்லை என்ற நிலையில் இணையம் உண்மையில் ஒரு வரப்ரசாதமகவே அமைந்தது. சற்றே என் எழுத்துத் தினவை தனித்துக் கொள்ளும் நோக்கில் வலைப்பதிவுகள் பக்கம் ஒதுங்கியவனுக்கு விருது தந்து சந்தோஷப் படுத்தியிருக்கிறார் நண்பர் கலை.

பட்டாம் பூச்சி விருதின் நோக்கம் புதிய பதிவர்கள் மீது வெளிச்சம் விழ வேண்டுமென்பதுதான் என்றாலும் இது சற்று முன்னாலேயே எனக்கு கிடைத்து விட்டதோ என்று ஒரு சிறு சங்கடம். ஏலவே பல ஞானச் சிங்கங்களின் வலைப்பக்கத்தை அலங்கரிக்கும் இப்பட்டாம் பூச்சி இந்த சிற்றெரும்பின் வலைப்பூவிலும் பறப்பது ஆச்சரியமான ஒன்று. என்னோடு சேர்த்து விருது பெற்றோர் நிஜமாகவே அசாத்திய திறமையாளர்கள்.

இன்னமும் சிரத்தையெடுத்து பதிவிட வேண்டுமென்ற எண்ணம் வந்துள்ளது. நேரம்தான் பிரச்சினை.
எல்லாம் சரி நானும் இப்பதிவை மூன்று பேருக்கு கொடுக்க வேண்டுமாம். please கொஞ்சம் அவகாசம் கிடைக்குமா

2 கருத்துகள்:

வேத்தியன் சொன்னது…

பட்டாம்பூச்சி விருது பெற்றமைக்கு வாழ்த்துகள்...

தர்ஷன் சொன்னது…

நன்றி வேத்தியன்

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails