திங்கள், 23 பிப்ரவரி, 2009

எல்லாப் புகழும் ரஹ்மானுக்கே


'ஸ்ளம் டோக் மில்லியனியர்'
. ஆர். ரஹ்மான் கோல்டன் க்ளோப் விருதுக்கு பரிந்துரைக்கப் படும் வரை இப்படி ஒரு படம் வந்ததே எனக்கு தெரியாது. அவருக்கு விருதும் கிடைத்தப் பின் நடந்தேறிய சம்பவங்கள் படத்தையும் எப்படியாவது பார்த்து விடும் ஆசையை ஏற்படுத்தியது. அதன் பின்தான் ஒரு மாதிரி படத்தை தேடிப் பார்த்து முடித்தேன்.(DVD
இல்தான் )

படத்தை பார்க்க முன்பே படத்தின் விமர்சனமொன்றில் படத்தின் கதை சுருக்கத்தை படித்த போது குப்பத்து சிறுவன் போட்டி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு கோடிஸ்வரன் ஆகிறான் என ஏதோ கோகுலத்தில் வரும் சிறுவர் கதை போல உள்ளதே என யோசித்தேன். ம்ஹ்ம்.. படம் பார்த்த போது அங்கேதான் ஏமாந்து போனேன். போட்டி நிகழ்ச்சியும் அதையொட்டிய அவனது வாழ்க்கை சம்பவங்களும் சலிப்பூட்டதவாறு படமாக்கப் பட்டிருந்த விதம் அவார்ட் தரப்பட்டிராவிட்டால்தான் ஆச்சரியம். நம் தமிழ் இயக்குனர்கள் இரு வேறு கதைக்களங்களில் பயணிக்கும் கதையை தொடர்பு படுத்த திணறுவதை பார்க்கும் போது ( விருமாண்டி விதி விலக்கு) இதை இத்தனை லாவகமாய் சாத்தியப் படுத்தியிருக்கும் இயக்குனர் நிச்சயம் பாராட்டுக்குரியவர்.

அமிதாப்
பச்சனை பார்க்கவென மலத்தில் குதித்தெழுவது, தாஜ்மகால் பார்க்க வரும் உல்லாசப் பயணிகளுக்கு வழிக்காட்டுவது போன்ற கலகலப்பான காட்சிகளினூடே சேரி வாழ்வின் அவலங்களையும் வாழ்க்கை போராட்டத்தில் தமது சிறுபிள்ளைதனத்தை தொலைத்து விட்ட சிறார்களின் துயர் நிறைந்த காட்சிகளும் நம் மனதை சற்றே கலங்கச் செய்ய வல்லன .
ஜமால் போட்டியில் கலந்து கொள்வது தன் காதலி லத்திகாவையும் அடையும் நோக்கோடுதானாம் ஆனால் ஏனோ அவர்கள் சேர்வதைப் பற்றி மனம் அவ்வளவாய் அக்கறை கொள்ளவில்லை.

பிரதான
நடிகர்கள் பெரிதும் அறிமுகமற்றவர்கள் அனில் கபூர் இருக்கிறார் என் சிறு வயதில் தொலைக்காட்சியில் இவர் மாதுரி டிக்சித்தோடோ ஸ்ரிதேவியோடோ கட்டிப் பிடித்து ஆடுவதை கொட்டக் கொட்ட விழித்துப் பார்த்திருக்கிறேன் இதில் இவர் நடிக்கவும் செய்கிறார். குறிப்பாக
ஜமால் jack hops விடையாக சொல்லும் போது காட்டும் முகபாவனை. இர்பான் கான் பில்லு பார்பரில் பசுபதியின் பாத்திரம் செய்பவர் மற்றவர்கள் யாரையும் எனக்கு தெரியாது.

சரி
படம் தொடர்பான விமர்சனங்கள் இந்தியர்களுக்கு உள்ள கவலையே தமது பிச்சைக்காரத்தனத்தை யாரோ ஒரு வெள்ளைக்காரன் படமா எடுத்து உலகம் பூரா ஓட்டிட்டானே என்பதுதான் இது ஒரு இந்தியப் படமாயிருந்து அங்கு மட்டும் ஓடியிருந்தால் அவ்வளவு தூரம் கவலைப் பட்டிருக்க மாட்டனர். இங்கு சிங்களவனிடம் இத்தனைப் பட்டும் மக்கள் டிவியில் ஒரு முறை தமிழக மக்கள் இலங்கை தேசியக் கொடியை எரித்தப் போது மனம் இலேசாக வலித்தது. இவ்வகையில் இந்தியரின் கோபம் உணரத்தக்கதே.


ஆனால்
படம் சேரி வாழ்க்கையை மாத்திரம் கூறவில்லை இந்தியாவின் செழிப்பான ஒரு பக்கமும் காட்டப் படுகிறது. ஏழைகளின் பொருளாதாரத்தையும் சிந்தனையையும் சேர்த்தே சுரண்டும் மிகையான கதாநாயகத்துவதோடு வரும் சினிமாக்கள், இன்று இந்தியாவின் வளர்ச்சிக்கு காரணம் நாம்தான் என கூறும் மேல்தட்டு வர்க்கத்தின் வாழ்க்கை முறை என்பவற்றையும் கூறுகிறது.
படம் பார்ப்பவருக்கு மும்பையின் வறுமை மட்டுமின்றி வறுமைக்கு காரணமும் தெரிந்து விடும்.

இதன்
பின்னணியில் படத்திற்கெதிராய் வெகுண்டெழுந்து கருத்துக் கூறிய அமிதாப் வகையறாக்களின் சமூக் அக்கறை உணரக்கூடியதே. இதன் போது தானும் ஒரு super star ஆய் இருந்தும் படத்தை ஆதரித்த ஷாருக்கான் பிக் பியை எதிர்க்க வேண்டும் என்றில்லாமல் உண்மையில் செய்திருந்தால் பாராட்டுக்குரியவர்.


அடுத்து
நம்ம ஹீரோ

ரஹ்மான்
முன்ன போல் இல்லை இப்பெலாம் பாட்டு முன்ன மாதிரி ரசிக்க
முடியிறது இல்ல என் பலர் புலம்புகின்றனர். உண்மையில் அவர் இப்போதெல்லாம் உலக ரேஞ்சில் இசையமைக்கிறார் நமக்குத்தான் ஞானம் இல்லை அதுதான் உண்மையையும் இருக்க கூடும். முன்பே வா என் அன்பே வா, நியூயார்க் நகரம், சகானா சாரல் தூவுதோ பாடல்கள் சமீபத்தில் வந்தவைதான்.எப்படியோ தமிழில் அவரை விட்டால் ஒஸ்கார் எடுக்க எவருமில்லை
படத்தில் பாடல் கேட்ட போதும் படம் பார்த்த போதும் எனக்கு வழக்கமான ரஹ்மான்தான் தெரிந்தார். ஆனால் இன்று ஒஸ்காருக்குப பின் இதே இசையை கேட்ட போது ஏனோ புல்லரித்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails