விஞ்ஞானம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விஞ்ஞானம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 6 அக்டோபர், 2011

சிலிக்கான் சிங்கம்





”எந்தவொரு மனிதனும் இறப்பதற்கு விரும்புவதில்லை. சொர்க்கத்திற்கு செல்ல நினைப்பவர்கள் கூட. என்றாலும் மரணம் யாராலும் வெற்றிக் கொள்ளப்பட முடியாத, நாம் அனைவரும் கட்டாயம் பகிர்ந்து கொள்ள வேண்டிய ஒரு இலக்கு. மரணம் வாழ்வின் மிகச் சிறந்த கண்டுப்பிடிப்பு. பழையதைக் கழித்து புதியதை புகுத்தி வாழ்வை மாற்றும் தூதன். நீங்களும் கிழடு தட்டி இவ்விடத்தை விட்டு அகலும் நாள் வெகு தூரத்தில் இல்லை. நாடகத்தன்மையான வார்த்தைகளாயிருந்தாலும் இதுவே உண்மை.”

என்று நிலையாமையைப் பற்றிக் கூறியவர் இன்றிலிருந்து நம் மத்தியில் இல்லை. ஆம் ஆச்சரியப்படத் தக்க தொழினுட்ப சாதனைகளின் மூலம் எதிர்காலத்தை நிகழ்காலத்திலேயே காணும் சாத்தியங்களை உருவாக்கிய ஸ்டீவ் ஜாப்ஸ் இறந்து விட்டார். வாக்மனையும், லாப்டாப்பையுமே வாய் பிளந்து பார்க்கும் என்னைப் போன்ற தற்குறிகளுக்கு எல்லாம் ஐப்பாடும், ஐஃபோனும், ஐப்பேடும் பெரும் ஆச்சரியங்கள்தான்.

இந்த பெயரை நான் முதன்முதலில் கேள்விப்பட்டது குமுதத்தில் வந்த “பிஸினஸ் மகாராஜாக்கள்” என்ற தொடரில். அதன் பிறகு “ஃபொரெஸ்ட் கம்ப்” திரைப்படத்தில் டோம் ஹேன்க்ஸ் இறால் பிடித்து சம்பாதிக்கும் பணத்தை டான் அப்பிள் நிறுவனத்தில் முதலிட்டு பெரிதாய் காசு பார்க்கும் போது அத்தனை லாபம் கொழிக்கும் கம்பனியை நடத்துமளவுக்கு இவரென்ன அவ்வளவு பெரிய அப்பாடாக்கரா என யோசித்திருக்கிறேன். ஆப்பிள் நிறுவன CEO ஆக 2006 தொடக்கம் 2010 வரை வருடமொன்றிற்கு அவர் பெற்ற சம்பளம் 1 டொலர் மட்டுமே. இதை படிக்கும் ஒரு ரூபாய் சம்பளம் பெற்ற வேறு யாரேனும் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல.

திருமணம் செய்து கொள்ளாத ஒரு இளம் ஜோடிக்குப் பிறந்து பின் தத்துக் கொடுக்கப்பட்டு கல்வியில் நாட்டமின்றி வளர்ந்து பின் தொழினுட்ப புரட்சியின் தலையாய நபராக மாறிய இவரின் வரலாறு ஒரு சினிமா கதையை விட சுவாரசியமானது. வாழ்வில் சடுதியாக முன்னேற்றத்தை சந்தித்த ஜாப்ஸ் அதையொன்றும் நேர்மையான வழியில் அடையவில்லை. நேர்மையாக ஒரே பாட்டில் வெற்றியை சுவைக்க அவர் ஒன்றும் ரஜினிகாந்த் இல்லையே. ஆக சாம,தான, பேத, தண்டங்களைப் பிரயோகித்தும் முடியாத போது ஏகப்பட்ட தகிடு தத்தங்களை செய்துமே அவர் இந்த இடத்திற்கு வந்தார். துரோகம் என்ற வார்த்தைக்கெல்லாம் இந்த வியாபாரக் காந்ததின் அகராதியில் வியாபர நுணுக்கம் என்ற அர்த்தம் இருக்கக்கூடும்.
”முன்னேற்றம் உன் குறிக்கோளாயின் நீ மற்றவர்களைப் பற்றி சிந்திப்பதை விட்டுவிடு” என்ற பில்லா அஜித் பாணியிலான இவரது மேற்கோள் உலகப் பிரசித்தம்.

தரமான பொருட்கள் மலிவான விலையில் இது ஸ்டீவின் தாரக மந்திரம். இதன் மூலம் அதிகமான வாடிக்கையளர்களை கவர்ந்த இவர் பெற்ற லாபமும் பல மில்லியன் டாலர்கள் இருக்கும். ஆனால் அதற்காக உலகெங்கும் இருந்த ஆப்பிள் தொழிற்சாலை பணியாளரகள் அனுபவித்த துன்பம் சொல்லி மாளாது. சீனாவில் ஐபாட் தொழிற்சாலை ஒன்றில் தங்கியிருந்து வாரத்திற்கு 60 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்து மாதமொன்றிற்கு 100 டொலர் அளவில் மட்டுமே சம்பளம் பெற்ற 200,000 ற்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வருவாயில் பாதிக்கு மேல் உணவு மற்றும் வதிவிடத்திற்காக பிடித்தம் செய்யப் பட்டது, எல்சிடி திரைகளை சுத்தம் செய்யப் பயன்படும் இரசாயனப் பொருளால் பல தொழிலாளர்கள் நோய்வாய்ப்பட்டது என்பனவெல்லாம் வண்ணமயமான ஆப்பிளின் சரித்திரத்தின் கறுப்பு அத்தியாயங்கள்.
நம்மை ஒரு நவீன உலகுக்கு வழிநடத்தியவராக ஸ்டீவை கெளரவிக்கும் நாம் அந்த தொழிலாளர்களையும் என்றென்றும் நினைவு கூறுதலே ஞாயமாகும்.


டிஸ்கி:- ஆப்பிளின் லேட்டஸ்ட் தயாரிப்பான ஐஃபோன் 4s எதிர்பார்த்த வர்த்தக வெற்றியைப் பெற தவறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

புதன், 24 பிப்ரவரி, 2010

பெருமை வாய்ந்த பிள்ளையார்

1995 ம வருடம் என்று நினைக்கிறேன் அப்பொழுது பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் செய்திருந்த இலங்கை வரலாற்றில் என்றுமில்லாதவாறு வெற்றி மேல் வெற்றிக் குவித்துக் கொண்டிருந்த ஒரு காலக்கட்டம். எனக்கு 13 வயதளவில்தான் இருக்கும். கிரிக்கெட் வெறி தலைக்கேறியிருந்த சமயம் யாரேனும் நான் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருக்கையில் சனலை மாத்தினார்கள் என்றால் தொலைந்தார்கள்.இப்படி இருக்கும் போதுதான் கிரிக்கெட் காய்ச்சலை இலகுவாய் புறந் தள்ளிய அந்த சம்பவம் நடைப் பெற்றது.

"விஷயம் கேள்விப் பட்டீர்களா? இந்தியாவில் பிள்ளையார் பால் குடிககீராறாம் tv இல காட்டினார்கள்" என்று போகிற போக்கில் ஒருவர் சொல்லிப்போனதுதான் தாமதம் அனைவரும் தெரிந்த இடத்திலெல்லாம் பால் வாங்கிக் கொண்டு வழிப் பிள்ளையார்களுக்கு கொடுக்கத் துவங்கினார்கள். எத்தனை இடத்தில் பிள்ளையார் பால் குடித்தார்? எத்தனை லீட்டர் குடித்தார் என்ற புள்ளி விவரங்கள் தெரியவில்லை. ஆனாலும் போனவர்களில் அநேகமானோர் பரவசம் ததும்பிய முகத்துடன் வந்தனர்.

அப்போதெல்லாம் சிறுவானாயிருந்த நான் அதிகம் வாசிப்பது பக்திக் கதைகளைத்தான் அதுவும் அவற்றை வாசித்து இறைவனின் அற்புதங்களை பார்த்து வியந்து ஆண்டவனே நான் என்ன புண்ணியம் செய்தேனோ இந்துவாய் பிறந்திருக்கிறேன் என்று புளங்காகிதம் கொண்டிருந்த காலம். எனக்கும் பிள்ளையாருக்கு பால் கொடுத்து பார்க்கும் சிறிய ஆர்வம் தலைக்காட்டியது. வீட்டில் என் விருப்பத்தை சொன்னப் போது அதெல்லாம் ஆச்சாரமாய் செய்ய வேண்டியது என என் விருப்பத்துக்கு தடை போடப் பட்டது. ம்ஹ்ம் வீட்டிலுருந்து வெளியே போக வழியில்லை பாலுக்கும் வழியில்லை.

அப்போதுதான் எனக்கு நந்தனாரும், தின்னனாரும் ஞாபகத்துக்கு வந்தனர் அவர்களை விட பக்தியில் குறைந்தவனா நான் என்ற எண்ணத்தோடு திட்டம் ஒன்றை தீட்டினேன். எனது மச்சானும் என்னோடு இந்த செயற்றிட்டத்தில் இணைந்துக் கொண்டான். பூஜையறை சென்று அங்கிருந்த சிறிய பிள்ளையார் சிலையை வெளியே கடத்திக் கொண்டு வந்தேன். வீட்டுக் கொல்லைப் புறத்திலே கம்புகளை ஊன்றி கோயில் போல் அமைத்து அதற்கு யூரியா உரப்பையினால் கூரை அமைத்தோம். உள்ளே களிமண்ணை குழைத்து மேடை போல் அமைத்து விட்டு அதில் விநாயகரை வைத்தோம். பிறகு கிடைத்த பூக்களை எல்லாம் பறித்து அவர் மேல் தூவி விட்டு "ஐந்து கரத்தனை ஆனை முகத்தினை" எல்லாம் பாடி விட்டு பார்த்தால் அவருக்கு கொடுக்க பால் இல்லை. பூஜையறையில் இருந்து விநாயகரை கடத்தியது போல் சமையலறையில் இருந்து பாலை கடத்துவது அவ்வளவு எளிதான ஒரு விடயமாய் இருக்க வில்லை. என்ன கொடுமை கடவுளே இது என்று நொந்தவன் பின் மெல்ல மனதை தேற்றிக் கொண்டு அடியேனின் அன்பை அறியாதவரா கடவுள் கொடுப்பதை மனமுவந்து ஏற்பார் என்ற நம்பிக்கையுடன் spoon ஒன்றை கொண்டு வந்து எங்கள் வீட்டில் toilet போகும் போது தண்ணீர் அள்ள பீப்பாய் ஒன்று வைத்திருந்தனர். அதிலிருந்து சிறிது தண்ணீர் அள்ளி பிள்ளையாருக்கு கொடுக்க என்ன ஆச்சரியம் ஒரு சொட்டு விடாமல் அவ்வளவையும் உறிஞ்சிக் குடித்தார் பிள்ளையார்.

அதிசயம் பார்க்க ஆசைப் பட்ட என் மச்சான் " பாவம் பிள்ளையாருக்கு ரொம்ப தாகம் போல" என கூறி பிள்ளையார் மேல் பலியை போட்டு விட்டு கக்கூஸ் தண்ணியை மேலும் அள்ளி அள்ளி பிள்ளையாருக்கு கொடுக்கத் துவங்கினான். அசூயை படாமல் பொறுமையாக அவ்வளவையும் குடித்தார் பிள்ளையார். சாமி காக்கூஷ் தண்ணி என சந்தேகம் கிளப்ப முற்பட்ட மச்சானை "போடா பிள்ளையார் அப்படித்தான் எளிமையானவர் சாணத்தில் பிடித்து வைத்தாலே அவர் வந்து விடுவார். கோமயம் எலாம் அவருக்கு பிடித்த அபிஷேகப் பொருள் பார்வதி குளிக்கும் போது தேய்த்ததில் உருவான ஊத்தை தானேடா அவர் அதான் ரொம்ப விரும்பிக் குடிக்கிறார் என அவன் வாயை அடைத்தேன்.

அன்று முழுவதும் எல்லையில்லா ஆனந்தத்துடன்தான் இருந்தேன். பிறவிப் பெருங்கடலை கடந்து விட்டதாயும் இறைவனுடன் விரைவிலேயே நான் இரண்டறக் கலக்கும் நாள் வரப் போவதாயும் எண்ணிக் கொண்டேன்.

அப்போதுதான் இடியென தாக்கும் அந்த செய்திக் கிடைத்தது. அதாவது சில விஞ்ஞானிகள் ஏதோ நிறமூட்டிய பாலை கொடுத்த போது பால் சிலையில் துளியாக இருந்ததைக் கொண்டு மயிர்துளைவிளைவு மற்றும் மேற்பரப்பு இழுவிசை என்பவற்றின் ஊடாக ஏதோ விளக்கமளித்து விட்டனராம். திரவ மூலக்கூறுகளை பிணைத்திருக்கும் மேற்பரப்பிழுவிசையினால்(surface tension) புவிஈர்ப்பினையும் மீறி பால் மேலேத் தள்ளப் பட அங்கிருந்து மயிர்த்துளை விளைவினால்(capillary action) பால் தொடர்ந்தும் உள்ளே செல்கின்றது என்பதே இவ்விளக்கமாகும்.

விண்வெளியில் புவியீர்ப்பு புறக்கணிக்கத் தக்க அளவில் தொழிற்படும் இடத்தில் திரவப் பானங்களை பருக மேற்படி மேற்பரப்பிழுவிசையை அவர்கள் பயன்படுத்த நாம் பிள்ளையாரைப் பால் குடிக்க வைக்க பயன் படுத்துகிறோம் இன்னதென்று தெரியாமலே.
தாவரங்களில் காழ் இழையம் வழியே தொடர்ச்சியாய் நீர் உட்செல்வதிலும்
(சாற்றேறம்) மேற்படி விடயங்கள் பங்களிக்கின்றன.

விடுவோம் விரைவிலேயே கண்களில் இரத்தம் வழிதல், வீபுதி, குங்குமம், தேன் வடிதல் போன்ற ஏதாவது செய்து பிள்ளையார் தன்னை நிருபிக்காமலா போகப் போகிறார்.



சனி, 14 நவம்பர், 2009

டார்வினிஸம் பொய்யா


இன்று இணையத்தில் மேய்ந்து கொண்டிருந்த போது யாத்திரிகனின் இந்த பதிவை காண நேர்ந்தது. பதிவின் நோக்கம் எனக்கு தெளிவாகவில்லையெனினும் அது இயற்கை தேர்வுக் கொள்கையை நிராகரித்து சிறப்பு படைப்புக் கொள்கையே சரி எனும் பாங்கில் அமைந்திருந்தது. மு. மயூரன் அவரின் நோக்கை சரியாய் அறிந்து தர வேண்டிய விதத்தில் சிறப்பான பின்னூட்டங்களை வழங்கி இருந்தார்.
ஏதோ எனது சிற்றறிவுக்கு எட்டிய வகையில் டார்வினிஸம் பற்றி யாத்திரிகனின் சந்தேகங்களுடன் தொடர்பு படுத்திக் கதைக்கலாம் என நினைக்கிறேன்.

முதலாவது டார்வின் தனது கொள்கையை மிகப் பலவீனமான அடித்தளத்திலே கட்டியமைத்தார் என்று கூறுகிறார். அது ஓரளவு உண்மைதான் Theory of natural selection ஐ விளக்குகையில் அங்கிகள் மிகையாய் உற்பத்தி ஆகின்றன என்றும் அவ்வாறு மிகையாய் உற்பத்தியான அங்கிகளிடையே மாறல்கள் உண்டென்பதும் மாத்திரமே அவர் அவதானங்களின் வாயிலாக கண்டறிந்த உண்மைகள். மிச்சமெல்லாம் அந்த அவதானங்களின் அடிப்படையில் அவர் கட்டியெழுப்பிய அனுமானங்கள். இத்தனை ஏன் அந்த மாறல்கள் எப்படி ஏற்பட்டன எப்படி அடுத்த சந்ததிகளுக்கு கடத்தப்படுகின்றன என்பதை கூட அவரால் விளக்க முடியவில்லை.ஆனாலும் இரண்டு நூற்றாண்டுகள் கடந்த பின்னும் இன்னும் வலுவிழக்காது இருப்பதும் அவரால் விளக்கமளிக்கப்படாமற் போனவை இன்று ஆதாரங்களுடன் நிருபிக்கப்பட்டுமிருப்பது அவரின் மேதமையைதான் விளக்குகின்றதே அன்றி வேறில்லை.

முதல் உயிரின் தோற்றம் பற்றி உங்களுக்கு இருக்கும் சந்தேகங்களை Harun yahya வாயிலாக கேட்டிருக்கீர்கள். முதல் உயிரி கடவுளால் படைக்கப்பட்டு பின் கூர்ப்பு நடைப்பெற்றது என டார்வின் சொல்லியிருந்தால் கேள்வியின்றி கூர்ப்புக் கொள்கையை ஏற்றுக் கொண்டிருப்பீர்கள். Origin of species இன் ஏதோ ஒரு பதிப்பில் டார்வினும் படைப்போன் என்ற ஒரு வார்த்தையை பாவித்தார் வேறெதற்கு மதவாதிகளை சமாளிக்கத்தான். பின் அதை நினைத்து புலம்பியது தனிக்கதை. சரி உங்கள் பிரச்சினைக்கு வருவோம்
முதல் உயிரியின் தோற்றம் பற்றிய Oparin இன் உயிர் இரசாயனக் கூர்ப்புக் கொள்கையை stanley miller உம் Urey உம் ஆய்வு கூடத்தில் செய்த பரிசோதனையின் மூலம்( NH3, CH4, H2O, H2 வாயுக்களை கொண்ட வாயு அறையில் உயர் மின்னழுத்தம் மூலம் சக்தியை வழங்கி Amino acids,ribose வெல்லங்கள், Adenin போன்றவற்றை தொகுத்தது) 1950 களிலேயே உலகுக்கு காட்டி விட்டனர். இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்று Orgel வெகு அண்மையில் 6 அங்குல Nucleotide ஐயே தொகுத்து காட்டி விட்டார். so உங்கள் முதல் வாதம் அடிப்பட்டு போகிறது.



அடுத்தது பரம்பரை இயல்புகள் கடத்தப்படுவது பற்றி. நண்பரே டார்வினால் இயல்புகள் கடத்தப்படுவது பற்றி விளக்கமளிக்க முடியவில்லை என்பது உண்மையே. எனினும் பலர் அது தொடர்பில் ஆய்வுகளை செய்த வண்ணமே இருந்தனர். August Weismann 34 சந்ததிகளுக்கு எலிகளின் வாலை வெட்டி செய்தபரிசோதனை பற்றி அறிந்திருப்பீர்கள்.
ஆக சந்ததிகளுக்கு இயல்புகள் கடத்தப்படுவது மரபணுக்களின் மூலமே மரபணுக்களில் ஏற்படும் மாறல்கள் மட்டுமே கடத்தப்படும் புறத்தோற்ற மாறல்கள் கடத்தப்படாது என சான்றுகளோடு கூறிய மெண்டல் டார்வின் கொள்கைக்கு வலு சேர்த்துள்ளாரா இல்லை அதை தகர்த்துள்ளாரா. அடுத்து மிகையாய் உற்பத்தியான அங்கிகளுக்கிடையே மாறல்கள் எவ்வாறு உருவாகின்றன என அவர் அறிந்திராத போதும் பின் வந்தவர்களால் விகாரம்(Mutation) பற்றிய கருத்துக்கள் கூறப்பட்டது.

அடுத்து Survival of the fittest ஐ வைத்துக் கொண்டு சமூகத்தில் மேலாதிக்கம் செலுத்த முற்படும் அதிகார வர்க்கத்தின் சதிதான் டார்வினை தூக்கிப் பிடிப்பது என்று சொன்ன போதுதான் உங்கள் சமூகப் பிரக்ஞை என்னை மெய்சிலிர்க்க வைத்தது.
இதையே இப்படிப் பார்க்கும் நீங்கள் எஜமானனாக வெள்ளையனும் அடிமையாக கருப்பனும் ஆண்டவானேலேயே படைக்கப்பட்டனர் என்றும் பிரம்மா தன் உடல் பாகங்களில் இருந்து சதுர் வர்ணங்களையும் படைத்தான் தலையில் உதித்தவனுக்கு மற்றவனெல்லாம் சேவகம் செய்ய வேண்டுமெனவும் சொல்லி சொல்லியே வயிறு வளர்க்கும் வீணர் கூட்டத்தை அல்லவா ஒரு பிடி பிடித்திருக்க வேண்டும்.

அப்புறம் கடைசியாக ஒரு விடயம் Science இல மாற்றம் என்பதே மாறாத விடயம். 1000 வருடங்களுக்கு முந்திய Holy Bible ஐயோ குரானையோ வேதங்களையோ தூக்கிப் பிடிக்க இது ஒன்றும் மனிதனை அடிமைப் படுத்த வந்த அஞ்ஞானம் அல்ல. எப்படி நியுட்டனின் இயக்க விதிகளால் சகல இயக்கங்களையும் விளக்க முடியாத போது ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு அவசியப்பட்டதோ அது போல தொடரும் கண்டுப்பிடிப்புகள் விஞ்ஞானத்தை வலுப்படுத்துமே அன்றி அதை நீர்த்துப் போகச் செய்யாது.

ஞாயிறு, 10 மே, 2009

பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்



1995 வருடம் என்று நினைக்கிறேன் அப்பொழுது பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் செய்திருந்த இலங்கை வரலாற்றில் என்றுமில்லாதவாறு வெற்றி மேல் வெற்றிக் குவித்துக் கொண்டிருந்த ஒரு காலக்கட்டம். எனக்கு 13 வயதளவில்தான் இருக்கும். கிரிக்கெட் வெறி தலைக்கேறியிருந்த சமயம் யாரேனும் நான் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருக்கையில் சனலை மாத்தினார்கள் என்றால் தொலைந்தார்கள்.இப்படி இருக்கும் போதுதான் கிரிக்கெட் காய்ச்சலை இலகுவாய் புறந் தள்ளிய அந்த சம்பவம் நடைப் பெற்றது.

"விஷயம் கேள்விப் பட்டீர்களா? இந்தியாவில் பிள்ளையார் பால் குடிககீராறாம் tv இல காட்டினார்கள்" என்று போகிற போக்கில் ஒருவர் சொல்லிப்போனதுதான் தாமதம் அனைவரும் தெரிந்த இடத்திலெல்லாம் பால் வாங்கிக் கொண்டு வழிப் பிள்ளையார்களுக்கு கொடுக்கத் துவங்கினார்கள். எத்தனை இடத்தில் பிள்ளையார் பால் குடித்தார்? எத்தனை லீட்டர் குடித்தார் என்ற புள்ளி விவரங்கள் தெரியவில்லை. ஆனாலும் போனவர்களில் அநேகமானோர் பரவசம் ததும்பிய முகத்துடன் வந்தனர்.

அப்போதெல்லாம் சிறுவானாயிருந்த நான் அதிகம் வாசிப்பது பக்திக் கதைகளைத்தான் அதுவும் அவற்றை வாசித்து இறைவனின் அற்புதங்களை பார்த்து வியந்து ஆண்டவனே நான் என்ன புண்ணியம் செய்தேனோ இந்துவாய் பிறந்திருக்கிறேன் என்று புளங்காகிதம் கொண்டிருந்த காலம். எனக்கும் பிள்ளையாருக்கு பால் கொடுத்து பார்க்கும் சிறிய ஆர்வம் தலைக்காட்டியது. வீட்டில் என் விருப்பத்தை சொன்னப் போது அதெல்லாம் ஆச்சாரமாய் செய்ய வேண்டியது என என் விருப்பத்துக்கு தடை போடப் பட்டது. ம்ஹ்ம் வீட்டிலுருந்து வெளியே போக வழியில்லை பாலுக்கும் வழியில்லை.


அப்போதுதான் எனக்கு நந்தனாரும், தின்னனாரும் ஞாபகத்துக்கு வந்தனர் அவர்களை விட பக்தியில் குறைந்தவனா நான் என்ற எண்ணத்தோடு திட்டம் ஒன்றை தீட்டினேன். எனது மச்சானும் என்னோடு இந்த செயற்றிட்டத்தில் இணைந்துக் கொண்டான். பூஜையறை சென்று அங்கிருந்த சிறிய பிள்ளையார் சிலையை வெளியே கடத்திக் கொண்டு வந்தேன். வீட்டுக் கொல்லைப் புறத்திலே கம்புகளை ஊன்றி கோயில் போல் அமைத்து அதற்கு யூரியா உரப்பையினால் கூரை அமைத்தோம். உள்ளே களிமண்ணை குழைத்து மேடை போல் அமைத்து விட்டு அதில் விநாயகரை வைத்தோம். பிறகு கிடைத்த பூக்களை எல்லாம் பறித்து அவர் மேல் தூவி விட்டு "ஐந்து கரத்தனை ஆனை முகத்தினை" எல்லாம் பாடி விட்டு பார்த்தால் அவருக்கு கொடுக்க பால் இல்லை. பூஜையறையில் இருந்து விநாயகரை கடத்தியது போல் சமையலறையில் இருந்து பாலை கடத்துவது அவ்வளவு எளிதான ஒரு விடயமாய் இருக்க வில்லை. என்ன கொடுமை கடவுளே இது என்று நொந்தவன் பின் மெல்ல மனதை தேற்றிக் கொண்டு அடியேனின் அன்பை அறியாதவரா கடவுள் கொடுப்பதை மனமுவந்து ஏற்பார் என்ற நம்பிக்கையுடன் spoon ஒன்றை கொண்டு வந்து எங்கள் வீட்டில் toilet போகும் போது தண்ணீர் அள்ள பீப்பாய் ஒன்று வைத்திருந்தனர். அதிலிருந்து சிறிது தண்ணீர் அள்ளி பிள்ளையாருக்கு கொடுக்க என்ன ஆச்சரியம் ஒரு சொட்டு விடாமல் அவ்வளவையும் உறிஞ்சிக் குடித்தார் பிள்ளையார்.
அதிசயம் பார்க்க ஆசைப் பட்ட என் மச்சான் " பாவம் பிள்ளையாருக்கு ரொம்ப தாகம் போல" என கூறி பிள்ளையார் மேல் பலியை போட்டு விட்டு கக்கூஸ் தண்ணியை மேலும் அள்ளி அள்ளி பிள்ளையாருக்கு கொடுக்கத் துவங்கினான். அசூயை படாமல் பொறுமையாக அவ்வளவையும் குடித்தார் பிள்ளையார். சாமி காக்கூஷ் தண்ணி என சந்தேகம் கிளப்ப முற்பட்ட மச்சானை "போடா பிள்ளையார் அப்படித்தான் எளிமையானவர் சாணத்தில் பிடித்து வைத்தாலே அவர் வந்து விடுவார். கோமயம் எலாம் அவருக்கு பிடித்த அபிஷேகப் பொருள் பார்வதி குளிக்கும் போது தேய்த்ததில் உருவான ஊத்தை தானேடா அவர் அதான் ரொம்ப விரும்பிக் குடிக்கிறார் என அவன் வாயை அடைத்தேன்.

அன்று முழுவதும் எல்லையில்லா ஆனந்தத்துடன்தான் இருந்தேன். பிறவிப் பெருங்கடலை கடந்து விட்டதாயும் இறைவனுடன் விரைவிலேயே நான் இரண்டறக் கலக்கும் நாள் வரப் போவதாயும் எண்ணிக் கொண்டேன்.

அப்போதுதான் இடியென தாக்கும் அந்த செய்திக் கிடைத்தது. அதாவது சில விஞ்ஞானிகள் ஏதோ நிறமூட்டிய பாலை கொடுத்த போது பால் சிலையில் துளியாக இருந்ததைக் கொண்டு மயிர்துளைவிளைவு மற்றும் மேற்பரப்பு இழுவிசை என்பவற்றின் ஊடாக ஏதோ விளக்கமளித்து விட்டனராம். திரவ மூலக்கூறுகளை பிணைத்திருக்கும் மேற்பரப்பிழுவிசையினால்(surface tension) புவிஈர்ப்பினையும் மீறி பால் மேலேத் தள்ளப் பட அங்கிருந்து மயிர்த்துளை விளைவினால்(capillary action) பால் தொடர்ந்தும் உள்ளே செல்கின்றது என்பதே இவ்விளக்கமாகும்.

விண்வெளியில் புவியீர்ப்பு புறக்கணிக்கத் தக்க அளவில் தொழிற்படும் இடத்தில் திரவப் பானங்களை பருக மேற்படி மேற்பரப்பிழுவிசையை அவர்கள் பயன்படுத்த நாம் பிள்ளையாரைப் பால் குடிக்க வைக்க பயன் படுத்துகிறோம் இன்னதென்று தெரியாமலே.
தாவரங்களில் காழ் இழையம் வழியே தொடர்ச்சியாய் நீர் உட்செல்வதிலும்
(சாற்றேறம்) மேற்படி விடயங்கள் பங்களிக்கின்றன.

விடுவோம் விரைவிலேயே கண்களில் இரத்தம் வழிதல், வீபுதி, குங்குமம், தேன் வடிதல் போன்ற ஏதாவது செய்து பிள்ளையார் தன்னை நிருபிக்காமலா போகப் போகிறார்.

திங்கள், 6 ஏப்ரல், 2009

சிம்ரன் குளித்ததைப் பார்த்தவர் யார்


நிச்சயம் நீங்கள் எதிர்ப்பார்த்து வரும் சுவாரசியம் இங்கு கிடைக்காது நேரத்தை விரயஞ் செய்ய விரும்பாதோர் ஏதாவது உருப்படியாகச் செய்யலாம்.

நம்மவர் திரைப்படத்தில் ஒரு காட்சி வகுப்பறைக்கு வரும் கமல் பாடத்தை துவங்காமல் ஒரு சினிமா பாடலின் முதல் வரியை பாடுவார். உடனே மாணவர்கள் எல்லாம் அடுத்த வரியைப் பாடும் போது இது சினிமாவில் உங்களுக்கு பிடித்த ஊடகத்தில் வந்ததால் ஞாபகம் வைத்துள்ளீர்கள். அதுபோல உங்களுக்கு பிடித்தாற் போல் கற்பித்தல் என் கடமை என்று சொல்வார்.
இப்படித்தான் மாணவர்களுக்கு science ஐ எப்படி இலகுவாக கொடுக்கலாம் என யோசித்த போது ஏலவே நடைமுறையில் உள்ள சில நுட்பங்கள் ஞாபகம் வந்தது. படித்து பாருங்கள் உங்களுக்கு தெரிந்து ஏதும் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் பயன் படுத்திக் கொள்கிறேன்.



9 கோள்களையும் (இப்போது எட்டு) ஞாபகம் வைக்க ஒரு எளிய முறை
My very educated mother just show us nine planets இதில் ஒவ்வொரு சொல்லினதும் முதலெளுத்தைப் பார்த்தால்
M- Mercury, V-Venus, E-Earth, M-Mars, J-Jupiter, S-Saturn, U- Uranus, N-Neptune, P-Pluto



ஆவர்த்தன அட்டவணை எல்லோருக்கும் தெரியும் அதை மனனம் செய்ய மாணவர் மத்தியில் புழங்கும் ஒரு வார்த்தை விளையாட்டு
முதல் இருபது மூலகங்களை(elements) மனனம் செய்ய பயன்படுகிறது.
Hello hero little Baby bens car number O five Neeyum Naanum MGR Alla Sivaji Pathmini Saroja குளித்ததை Aru kanaala கண்டது
H- Hydrogen, H-helium, L-lithium, B-Boron, Be- Beryllium, C-carbon, F-Florin, Ne-Neon, Na- Sodium( Natrium) ,Mg-Magnesium , Al- Aluminium, Si- Silicon, P-phosphorus, S-sulphur, கு-குளோரின், Ar-Argon, K- potassium, க- கல்சியம்
சிவாஜி, MGR, பத்மினி, சரோஜா எனப் பெயர்களை பார்த்தால் இது ரொம்பப் பழசு போல் தெரிகிறது. சிவாஜி குளிப்பதில் அத்தனை சுவாரசியம் இல்லாததால் அதை சிம்ரன் என மாற்றலாம் என நினைக்கிறேன். (அப்பாடா தலைப்பையும் பதிவையும் தொடர்பு படுத்தியாச்சு)



இன்னுமொன்று தடையி(resistor) ஒன்றினது தடைப் பெறுமானத்தைக் காண அதிலுள்ள நிற வளையங்களைப் பயன் படுத்த வேண்டும். அந்நிற வளையங்களுக்கு உரிய பெறுமானத்தை பின்வரும் முறையில் ஞாபகம் கொள்ளலாம்.
B.B. ROY of Great Britain had a Very Good Wife
இங்கு முதலாவது B க்கு 0 என ஆரம்பித்து தொடர்ச்சியாக அதன் பெறுமானங்கள் கூடி wife இல் வரும் w க்கு 9 என முடியும். குறித்த பெறுமானத்துக்குரிய வளையத்தின் நிறம் அதற்குரிய எழுத்தினால் காட்டப்பட்டுள்ளது.



ஒளிக்கதிர் ஐதான ஊடகத்திலிருந்து அடர்ந்த ஊடகத்தை நோக்கிப் போகையில் செவ்வனை நோக்கி முறியும் என்பதை " ஐயோ அடிக்காதே நோகுது" என ஞாபகம் கொள்ளலாம்.



வானவில்லின் ஏழு நிறங்களுடன் தொடர்புப் பட்ட VIBGYOR அனைவரும் அறிந்தது. தமிழில் இப்படியும் சொல்லலாம் " ஊத்தைக் கந்தையா நீ பச்சை மரத்தடியில் செக்கச் சிவப்பாய்" முதல் எழுத்துக்களை கவனியுங்கள்.

மூலகங்களின் தாக்க வீதம் கூடிச் செல்லும் ஒழுங்கை காணும் முறை 1950 களின் இலங்கை அரசியல் நிலவரத்தை மையமாகக் கொண்டது.
" பொன்னார் பிளான் வெறும் பாதகச் செயல் ஐயா ஈழத் தமிழர் இலங்கை நாட்டில் அல்லலுறும் மக்கள் சோகத்தால் கண்ணீரைப் பொழிந்தனர்"
முதல் எழுத்துகளின் படி
மூலகங்களாவன பொன்,பிளாட்டினம்,வெள்ளி,பாதரசம்,செப்பு,ஐதரசன்,Pb,இரும்பு,நாகம்,அலுமினியம்,மக்னீசியம்,சோடியம்,கல்சியம்,பொட்டாசியம்
இது முற்றிலும் சரியானதாக இப்போது தோன்றவில்லை ஆனால் சில மாற்றங்களுடன் பயன்படுத்தலாம்.

நேரத்தை தின்றிருந்தால் மன்னியுங்கள்
எதற்கும் திட்டியேனும் ஒரு பின்னூட்டமும் தமிழ்மணம் தமிழிஷ் இல் வோட்டும் போட்டுடுங்க.
Related Posts with Thumbnails