திங்கள், 16 பிப்ரவரி, 2009

பாப் மார்லி

இலங்கையர்களுக்கு தெரிந்திருக்கும் இன்று இலங்கையிலுள்ள பல இளைஞர்களின் முன்மாதிரி இவர்தான் ஆட்டோ ஓட்டுனர்கள் தமது வாகனத்தில் இவரது பாடல்களை அலற விட்டுக்கொண்டு போவதும் தெருவோரக்கடைகளில் இவரது படம் போட்ட கைக்குட்டைகள் அதிகமாக விற்பனையாவதையும் கண்ட போதே இவர் யார் என தெரிந்து கொள்ளும் ஆர்வம் உண்டானது.

அதுவும் நான் பிறக்க இரு வருடங்களுக்கு முன்னமே இறந்து போனவர் இன்றைய இளைஞர்களை இவ்வளவு தூரம் ஆக்கிரமித்திருக்கிறார் என்றால் அவரிடம் ஏதோ ஒன்று இருக்க வேண்டும் என நினைத்து ஒரு சிலரிடம்

" யாருயா இவன் பரட்டை தலையோடு பிச்சை காரன் மாதிரி"

என்ற போது கடவுளையே பார்த்தது போல் பதறி கன்னத்தில் போட்டுக்கொண்டவர்கள்

"இவரைத் தெரியாதா? மிக புகழ்பெற்ற ரெகே இசைக் கலைஞர் கறுப்பினத்தவர்களின் வலியையும் வேதனையையும் தனது பாடல்களில் பதிவு செய்தவர்" என்று கூறினர்.

சரி நம்ம இளைஞர்களுக்குத்தான் நம்ம இனத்தவரை பற்றியே அக்கறை இல்லை கறுப்பினத்தவரை பற்றி என்ன வந்தது என அவர்களிடம் வினவ

" போப் மார்லிக்கு கஞ்சா புகைக்க லைசன்ஸ் தெரியுமா?"

என்றனர். என்னடா இது ஒன்றிற்கொன்று தொடர்பில்லாத இரு வேறு முரண்பாடான கருத்துக்கள் ஒருவரை பற்றி என்று யோசித்த போதுதான் சுவாரசியமான விடயமொன்றை காண நேர்ந்தது.

அண்மையில் மத்திய மாகாண சபை தேர்தல் கடமைகளுக்காக சென்றிருந்த போது அடையாள அட்டைகளை பரீட்சித்துக்கொண்டிருந்த போது போப் மார்லி தனது அடையாள அட்டை, வாக்காளர் அட்டை சகிதம் வந்து வாக்களித்து விட்டு போனார். அதாவது அவரை போலவே ஒருவர் அட ஒருவன் தனது தோற்றத்தையே ஒருவரை போல மாற்றி கொள்(ல்லு)கிறான் என்றால் எவ்வளவு அபிமானம் அவன் பேரில் இருக்கும் என்று யோசித்தேன் உடனே அவர் பற்றிய விடயங்களை தேடத்துவங்கினேன்.

அவற்றுள் பல உண்மையிலேயே சுவாரஷ்யமானவை
போப் மார்லி ஜமைக்க நாட்டு ரெக்கே இசை கலைஞர் பிரித்தானிய வெள்ளை இனத்தந்தைக்கும், கறுப்பின ஜமைக்க தாய்க்கும் பிறந்தவர். 1981இல் தனது முப்பத்தாறாவது வயதில் இறந்தார்.

சரி அவரது வரலாறை விடுத்து அவர் பற்றிய செய்திகள் நிஜமா என்று பார்த்தால் அவர் பற்றிய இரு வகையான தவல்களிலும் உண்மை உண்டு.
எதியோப்பிய மன்னராக இருந்த Hailie selassie என்பவரை கடவுளின் அவதாரமாக கருதி வழிபடும் Rasta fari இயக்கத்தை சேர்ந்த இவர் தனது பாடல்களை அன்பினால் ஒரே உலகம் செய்வோம் என்ற தொனிப்பொருளில் அமைத்தார். இதனாலேயே பாடல்களின் மூலம் சமூக மாற்றமொன்றை செய்ய விளைந்த ஒரு போராளியாக இவரை கருதுகின்றனர்.

அதிலும் போப் மார்லி நமக்கு(மலையகத்தவர்) மேலும் நெருக்கமானவர் பிரித்தானிய ஆட்சி ஜமைக்காவில் நிலவிய போது அங்கு அடிமைகளாக கரும்புத்தோட்டத்தில் வேலை செய்த கறுப்பர்களின் ஏக்கங்களை வெளிக்கொணரும் விதமாக வந்ததே ரெகே இசை. அவ்வகையில் அவ்விசையின் முடிசூடா மன்னன் போப் மார்லி உலகெங்கும் உள்ள ஒடுக்கப்பட்டுள்ள மக்களின் குறியீடாக கொள்ளப்பட வேண்டியவன்.

ஆனால் இன்றைய இளைஞர்களை போப் கவர்ந்திருப்பதற்கு காரணம் இதுவல்ல. Rasta fari இயக்கத்தினர் தாம் இயல்பாய் வாழ்வதாய் கூறிக்கொண்டு தலை வாருவதையும் குளிப்பதையும் கூடத் தவிர்த்தனர். உடல் நலத்திற்கு மிகவும் ஏற்றது எனக்கூறிக்கொண்டு கணக்கு வழக்கிலாமல் கஞ்சா புகைத்தனர். இம்மித மிஞ்சிய கஞ்சாவே இவரது அற்ப ஆயுளுக்கும் காரணமாக அமைந்தது. ஆனால் மேம்போக்காக கேள்வியுற்ற இவ்வாறான தகவல்களே இலங்கை இளைஞர்களிடம் அவரது திடீர் புகழுக்கு காரணம் என நினைக்கிறேன்.
நான் பேசிய சிலர் தமது எண்ணம் போல் வாழ்வுக்கு ரஸ்தா என பெயர் வைத்துக்கொண்டதை பார்த்த போது நான் நினைத்தது சரியெனவே தோன்றியது.
இன்னுமொன்று ஜிம்பாப்வே சுதந்திரம் பெற்ற போது அங்கு பாடி அதிபர் முகாபேவை தேசிய வீரர் எனப்புகழ்ந்தவர் மார்லி. இன்று இருந்திருந்தால் அவரை பற்றி என்ன சொல்வரோ தெரியாது.

தமிழ் திரையுலகுக்கும் இவர் நிறைய செய்துள்ளார். அதாவது இவரது பல பாடல்கள் நகலெடுக்கபட்டுள்ளன. சந்தேகமென்றால் இவரது Buffelo soldier பாடலை கேட்டு விட்டு நேருக்கு நேர் படத்தில் வரும் "அகிலா அகிலா " பாடலை கேட்டுப் பாருங்கள்


1 கருத்து:

Karthikeyan G சொன்னது…

Pls have a look @ my post & comments reg Bob, http://vedikai.blogspot.com/2009/04/bufalo-soldier-bob-marley_11.html



//அங்கு பாடி அதிபர் முகாபேவை தேசிய வீரர் எனப்புகழ்ந்தவர் மார்லி. இன்று இருந்திருந்தால் அவரை பற்றி என்ன சொல்வரோ தெரியாது.//

முகாபே மாவீரர்தான். No doubt.. He is a real hero.. Pls dont believe in Western media. And also dont believe Andy flower & Olanga. :-)

http://gowans.blogspot.com/2008/12/jestina-mukoko.html

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails