கௌதம் மேனன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கௌதம் மேனன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 6 ஜனவரி, 2012

ஏக் தீவானா தா - இசைப் பார்வை




இசைப்புயலின் பிறந்தநாளில்ஏக் தீவானா தாபாடல்களில் மூழ்கியிருந்தேன். பாடல் பற்றிய கருத்துக்களை நண்பர்களோடு ஃபேஸ்புக்கில் ஷேர் பண்ணலாம் என எழுதியது நீண்டு விட்டதால் பதிவாக .

ஹோஸன்னா” Leon D'Souza & Suzanne பாடியிருக்கிறார்கள். விஜய் ப்ரகாஷை விடவும் ஒரு மென்மையை பாடல் பூராவும் குழைத்து  விட்டிருக்கிறார்கள். காது வழியே தேன் பருகும் உணர்வு. மொத்தத்தில் தமிழை விட பெட்டர்.


ஷர்மிந்தா ஹூன்மன்னிப்பாயாவின் தமிழ் வடிவம், ஹிந்தி வார்த்தைகள் இசையோடு பொருந்திப் போக மறுப்பது ஹிந்தி தெரியாத எனக்கே புரிகிறது. அதையும் விட தமிழ் மன்னிப்பாயாவின் ஜீவனான ஷ்ரேயா கோஷல் இல்லாதது பெரிய குறை. இசைப்புயலோடு இணைந்திருப்பவர் மதுஸ்ரீ.

மலையாள ஆரோமலே ஹிந்தியில் உருமாறியிருக்கிறது. விடிவியில் இந்த பாடலை கேட்ட போது இருந்த பிரமிப்பு நிச்சயமாக இல்லை.

”தோஸ்த் ஹை ஹம் தோ” கண்ணில் கண்ணை ஒட்டிக் கொண்டே பாடலின் ஹிந்தி வடிவம். மிக்ஸிங்கில் சில மாற்றங்களை செய்திருக்கிறார்கள். ஒரு காதலனின் போராட்டத்தின் பதட்டம் தடதடக்கும் ரயிலின் பக்கத்தில் நிற்கும் நம்மையும் தொற்றிக் கொள்வதான அந்த பரபர உணர்வை ஹிந்திப் பாடல் தரவில்லை.

”க்யா ஹை மொஹாபத்” தமிழில் இல்லாத பாடல் . ஹிந்தி ரசிகர்களுக்கான இசை. எளிமையான இசை போலத் தோன்றினாலும் இசைப்புயலின் குரலின் வசீகரம் பாடலுக்கு ஒரு தனி அந்தஸ்தை தருகிறது. சொல்லி ஹிட் அடிக்கப் போகும் ஒரு பாடல்.

பதிவில் திருப்தியுறாதவர்களுக்காக எமியின் சிறப்பு உம்மா படம் 

”பூலோன் ஜைஸி” ஓமணப் பெண்ணேவின் இந்தி வடிவம். இசையை விட்டு ஓடும் வரிகளை வலுக்கட்டாயமாக சிறை பிடித்திருக்கிறார்கள். இது ஹிந்தி ரசிகர்களுக்கான பாடல் இல்லை. அங்கு ஹிட்டடிப்பது கடினம்.


”சுன்லோ சரா” குரலில் தேன் தடவி பாடுபவர் ஷ்ரேயா கோஷல். இசையிலும் ஆங்காங்கே ரசிக்கச் செய்யும் சில மாற்றங்கள்.

“சோஹ்ரா ஜபின்” விண்ணைத் தாண்டி வருவாயாவின் ஹிந்தி வடிவம்.இசைப்புயலுக்கு பதில் ஜவேட் அலி பாடியிருக்கிறார். சென்னையின் மொசார்ட் அளவுக்கு இல்லை.

மொத்தத்தில் தமிழளவிற்கு ஹிட் அடிக்க வாய்ப்பில்லாத ரஹ்மானின் சராசரியான இசைத் தொகுப்புகளில் ஒன்று. இரண்டாம் முறை செய்யும் போது மெருகேறும் என்பதெல்லாம் சும்மா. எப்போதும் முதலில் செய்வதே பெஸ்ட் என்பதை நிரூபித்திருக்கிறது. 


சனி, 27 பிப்ரவரி, 2010

விண்ணை தாண்டி வருவாயா = இசை + இளமை + காதல்

வெகு அன்னியோன்னியமான ஒரு காதல் ஜோடியின் அந்தரங்கத்தை எட்டிப் பார்த்தது போன்ற ஒரு அருமையான இயல்பான படம். கெளதம் வாசுதேவ் மேனனிடமிருந்து. ம்ம் காதல் ததும்பி நிரம்பி வழிகிறது படம் முழுவதும். காதல்,காதல்,காதல் படம் முழுக்க இது மட்டுமே.

அது பாட்டில் போய் கொண்டிருக்கும் வாழ்வில் தன பாட்டில் வருவது காதல். காதலை அடையும் முயற்சியில் வரும் இம்சைகள்தான் எத்தனை அப்படியான சந்தர்ப்பங்களில் ஊரில் எத்தனையோ பெண்கள் இருக்கையில் ஏன் இவளைக் காதலித்தோம் எனத் தோன்றுமல்லவா? அப்படி ஒரு மலையாள கிறித்தவ குடும்பத்தில் பிறந்த ஜெஸ்சியை காதலிக்கும் ஹிந்து இளைஞன் கார்த்திக் தனக்குத்தானே கேட்டுக் கொள்ளும் கேள்விதான் படமே


ம்ம் படத்தின் கதை ரொம்ப சிம்பிள் உங்களனைவருக்கும் தெரிந்ததுதான் வழமையான கெளதம் படங்களை போன்றே த்ரிஷாவை முதன் முதலாய் பார்க்கும் சந்தர்ப்பத்திலேயே காதலில் விழுகிறார் சிம்பு. சில பல முயற்சிகளின் பின் முதலில் மறுத்த த்ரிஷா பின் கௌதமின் சரித்திர பிரசித்திப் பெற்ற " I Think I'm in love with you" சொல்கிறார். பின் வீட்டார் எதிர்க்க கதை கெளதம் மேனனின் இஷ்ட Location அமெரிக்காவுக்கு எல்லாம் பயணித்து கடைசியில் சேர்ந்தார்களா? இல்லையா என்பது கிளைமாக்ஸ்.

சிம்புவைப் பார்க்க ஆச்சரியம் எல்லாம் எழவில்லை. அவர் திறமையாளர் என்பது தெரிந்ததுதான். ஆனால் இந்த படம் தரப்போகும் வெற்றியின் மிதப்பில் பழைய குருடி கதவைத் திறடி என விரல் சுத்தாமல் இருக்க வேண்டும். முதன் முதலில் காதல் வயப்படும் போது காட்டும் பரவசம், த்ரிஷாவை impress செய்வதற்காக எடுக்கும் முயற்சிகள், முதன் முதலில் பேசும்போதுக் காட்டும் தயக்கம், அரிதாகத் தலைக்காட்டும் கோபம், மெல்லிய சோகம் அனைத்தையும் முகத்திலேயே கொண்டு வந்திருக்கிறார். இதுவெல்லாம் இல்லாமல் அநியாயத்திற்கு அழகாய் வேறு இருக்கிறார். அதிலும் கணேஷ் வீட்டில் இவர் த்ரிஷாவுடன் பேசும் காட்சியில் கொஞ்சம் தாடி வளர்ந்திருக்கும். அப்படியே அவர் அப்பாவைப் போல் அத்தனை அழகு

த்ரிஷா ம்ம் ஓகே. எனக்கு ரொம்பவும் பிடித்த நடிகையில்லை. இந்தப் படத்திலும் பிடிக்குமளவு ஏதும் செய்து விடவில்லை. ஆனால் கொடுத்த வேலையைக் குறைவில்லாமல் செய்திருக்கிறார். ரொம்பவும் மெலிந்து கண்ணுக்கு கீழான கன்ன எலும்புகள் காலர் எலும்புகள் எல்லாம் தெரிய அதற்கு கீழும் ஏது சொல்லிக் கொள்ளும் படி பெரிதாய் இல்லை. இதனால்தானோ என்னவோ கௌதமும் நான் அவள் Front ஐப் பார்த்ததை விட back ஐப் பார்த்ததுதான் அதிகம் என வசனம் வேறு வைத்திருக்கிறார்.

இவர்கள் தவிர படத்தில் சொல்லும்படியான பாத்திரம் சிம்புவின் வயதான நண்பராக வரும் கணேஷ் என்றப் பாத்திரம். இவரை காக்க காக்கப் படத்தின் கமராமேன் என்கிறார்கள். எனக்குத் தெரிந்து காக்க காக்க படத்தின் கமராமேன் R . D . ராஜசேகர். படத்தில் timing ஆக இவர் அடிக்கும் comment க்கள் சிறப்பை உள்ளன. சிம்புவும் இவரும் போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் போது சிம்பு அடிக்கடி கேட்கும் கேள்வியை இவரே சிம்புவிடம் " இவ்ளோ பொண்ணுங்க இருக்கும் போது நீ ஏண்டா ஜெஸ்ஸிய லவ் பண்ணுன? " எனக் கேட்கும் போது அரங்கமே சிரித்தது.

கமரா மனோஜ் பரமஹம்சா இப்போதுதான் இவர் பெயரை கேள்விப் படுகிறேன். கண்ணில் ஒத்திக் கொள்ளலாம் எனும் அளவுக்கு காட்சிகள் அவ்வளவு அழகு. என்ன close up காட்சிகளில் த்ரிஷாவை கொஞ்சமேனும் மெனக்கெட்டு இளமையாய் காட்டியிருக்கலாம். எடிட்டிங் வழமைப் போல அன்டனி. குறையேதும் எனக்குத் தெரியவில்லை. நிறையப் பார்வையாளர்கள் இரண்டாம் பாதியில் சத்தமிட்டாலும் எதையும் வெட்டத் தேவையில்லை என்பது என் கருத்து.

நம்பி வந்தால் இரண்டரை மணி நேர entertainment க்குத் தான் உத்தரவாதம் என்பதை மீள ஒருமுறை நிருபித்திருக்கிறார் கெளதம் வாசுதேவ் மேனன். ரெண்டு வருடமா தமிழ் படத்தை இங்கிலிஷில் எடுப்பாரே அவரா? என தன்னையே கிண்டலடித்துக் கொள்ளும் அவர் ராஜபார்வையில்ருந்து இவரது மின்னலே வரை வழக்கிலிருக்கும் சர்ச் வெடிங் கிளைமாக்ஸ், தற்கொலை செய்துக் கொள்வதாய் மிரட்டும் தந்தை போன்றவற்றையும் பகடி பண்ணியவாறே தன படத்தில் சேர்த்திருக்கிறார். வழமையான அவரது கதை சொல்லும் பாணியிலான narrative ஸ்டைலிலேயே கதை நகர்கிறது. சிம்பு த்ரிஷாவைத் தான் காதலிப்பதற்கான காரணத்தைக் கேட்கும் போது முதல் படம் வரும் சொல்கிறேன் என்பார். பிறகு த்ரிஷாவிடமே சிலம்பரசன் த்ரிஷாவை பற்றி சொல்வதும் அது சொல்லப் படுவது எதில் என்பதும் புத்திசாலித்தனமான சுவாரசியம். சிம்பு கதை சொல்ல ஆரம்பிக்கும் அதே வசனங்களில் படம் முடியும் படியான வட்டமான திரைக்கதையும் அருமையாயத்தான் இருக்கிறது.

வழமையாக டைரக்டர் பற்றி இறுதியில்தான் சொல்வார்கள். நான் அவரைப் பற்றி முதலில் சொல்லி விட்டு இறுதியில் இவரைப் பற்றி சொல்லக் காரணம். இவரது இசையத் தவிர்த்து விட்டு இந்தப் படத்தைக் கற்பனை செய்தும் பார்க்க முடியாது. ச்சும்மா புகுந்து விளையாடியிருக்கிறார் இசைப் புயல்.
காதலில் விழுந்த கணத்தின் பரவசம் ஒரு கொண்டாட்டமான துள்ளாட்டமாக ஹோசன்னவில் ஆரம்பிக்க அவள் அழகை பிரமிக்கும் ஓமனப் பெண்ணே ஒரு கனவை போல் மிதக்கச் செய்கிறது. காதலியை உடன்பட வைக்கும் போராட்டம் தட தட என கண்ணில் கண்ணை பாட்டில். அடுத்து ஸ்ரேயா கோஷலும் இசைப்புயலும் பிரிவையும் ஏக்கத்தையும் உணர்த்தும் மன்னிப்பாயாவில் உருக பின் சர்ச் கல்யாணங்களில் வரும் இசை, நாதஸ்வர இசை எல்லாம் கோர்த்த ஒரு கல்யாண பரவசம் அன்பில் அவன் பாடலில். பாடல்களைத் தவிர்த்து விட்டு படம் எடுக்கலாமே என்ற வாதத்தை எல்லாம் தவிடு பொடியாக்கியிருக்கிறார் இசைப் புயல். படம் பார்த்தவர்கள் மனதை விட்டு சொல்லுங்கள் இவரைத் தவிர்த்து இன்னுமொருவர் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்க முடியுமா?

படத்தில் குறைகள் பெரிதாய் இல்லை. என்ன சிம்பு படத்தில் சண்டை வேண்டுமென்பதற்காகவோ என்னவோ த்ரிஷாவின் அண்ணன் கூட்டி வரும் நான்கு ரௌடிகளுடன் சண்டையிடுகிறார். வாரணம் ஆயிரத்தில் கதையைக் கொண்டு செல்ல திடீரென சூர்யாவுக்கு ராணுவத்தில் சேரும் ஆசை வந்தது போல யதார்த்தமான படத்தில் சிம்பு பத்து பேரை அடிப்பதை ஞாயப்படுத்த அவர் boxer என்று சொல்வது (லாஜிக்காமாம் ) மட்டும் கொஞ்சமாய் இடித்தது. கேரளாவில் நாலு நாளாய் சுற்றிய பின் கொஞ்சம் மூளையைப் பாவித்துதான் சர்ச்சில் த்ரிஷாவைக் காண்கிறார். ஆனால் அமெரிக்காவில் படம் எடுக்கப் போனவர் அங்கு அவரை சந்திப்பதை Just coincident என ஒத்துக் கொள்ள முடியவில்லை.

படம் கட்டாயம் பார்க்கலாம். எனக்குப் பிடித்தது. மனதை என்னவோ செய்தது. காரணம் அது என் கதை. கெளதம் மேனன் End card போடும் போது அது தன்னுடைய கதை என்பது போல முடிக்கிறார். படம் பார்த்த என் நண்பர்கள் பலர் தம் கதை என்கிறார்கள். so படத்தைப் பாருங்கள் இது உங்கள் கதையாகவும் இருக்கலாம்.

வியாழன், 26 மார்ச், 2009

படமெடுப்பது எப்படி Dr.விஜய் கௌதம் மேனனுக்கு ஆலோசனை




திரும்ப திரும்ப எத்தனை முறைப் பார்த்தாலும் சலிக்காத படங்களின் பட்டியலில் மின்னலே திரைப்படத்திற்கு உண்டு. படம் வெளிவந்த காலத்தில் தியேட்டரில் பிறகு டிவியில் என கணக்கு வழக்கில்லாமல் அப்படத்தை பார்த்திருக்கறேன். அதுவும் இலங்கை தேசிய தொலைக்காட்சி நேத்ரா டிவியில் வார இறுதி நாட்களில் அதிகம் போடப்படும் படம் இதுவாகத்தான் இருக்கும்.

காக்க காக்க பார்த்த போது இவர் எனக்கு ஒரு குட்டி மணிரத்னமாகத் தெரிந்தார். குட்டி குட்டி வசனங்கள் காரணமாக இருக்கலாம். ஐரோப்பிய வன்முறையை தமிழில் வழங்குபவர் என்ற குற்றச்சாட்டு இவர் மீது எழுந்தாலும் அந்த Hollywood பாணி விறு விறு திரைக்கதை என்னை வெகுவாய்க் கவர்ந்ததென்னவோ உண்மை.

வேட்டையாடு விளையாடுவில் தன் மனைவியின் சடலத்தைப் பார்த்து கமல் வழமைப் போல் "ஹா ஹா ............" எனக் கதறப் போகிறார் என எதிர்ப்பார்க்கையில் ஒரு வசனமும் கதறலும் இன்றி அவரை நடிக்க வைத்திருப்பாரே

வாரணம் ஆயிரம் ஒரு Biography அதுவும் ரொம்ப நீளம் ஆனால் எங்கேயாவது சலிப்புத் தட்டியதா. அது கௌதம் மேனன்.


அண்மையில் மாபெரும் இயக்குனரும் action நடிகர், " அப்பன் பண்ண தப்புல ஆத்தா பெத்த வெத்தல " போன்ற கலைத்துவமான பாடல்களை யாத்த பாடலாசிரியர், தற்போது இசையமைப்பாளர் என்ற பன்முகங்களையும் கொண்டவருமான இயக்குனர் பேரரசுவின் பேட்டி ஒன்றைக் காண நேர்ந்தது.

அதில் விஜய் பற்றி அவர் குறிப்பிட்டதுதான் ரொம்பக் கஷ்டமாய் போய்விட்டது. ஏற்கனவே அவரை அனைவரும் ஒரு கேலிப் பொருளாய் பார்க்கும் நிலையில் இவருக்கு தளபதி மேல் என்ன கோபமோ இதை வெளியில் எல்லாம் சொல்லி டாக்டரை பெருமைப் படுத்துவதாய் நினைத்து சிறுமை படுத்தியிருக்கிறார். அவரது punch dialog போலவே அவர் சீரியசாய் சொன்ன விஷயம் எனக்கு சிரிப்பாய் இருந்தது. உங்களுக்கு எப்படியோ படித்து பாருங்களேன்

கமர்ஷியல் பஞ்சாமிர்தம் கலக்கிக் கொடுத்தேன். அடுத்து ஆக்ஷன் ஜோதி ஏத்திட்டோம்ல...‘ காற்றில் கத்தி வீசிச் சிரிக்கிறார் டைரக்டர் பேரரசு. ஊர் பேரில் டைட்டில் வைத்து உறியடிக்கும் ஊரரசுவான பேரரசு, இப்போ டிக்கெட் எடுத்திருப்பது திருவண்ணாமலைக்கு. திரையில் கிரிவலம் வந்து கொண்டிருக்கும் திருவண்ணாமலை இயக்குநர் பேரரசுவுடன் ஒரு மினி பேட்டி.

இந்த மசாலாவை விட்டு வெளியே வரவே மாட்டீங்களா?

மசாலா பிடிக்காதவங்க யாராவது இருந்தா சொல்லுங்க... டைரக்டர் கௌதம் மேனன்கிட்ட திருப்பாச்சி, சிவகாசி டிவிடியைக் கொடுத்து இந்த மாதிரி கமர்ஷியலா படம் எடுங்கன்னு சொல்லியிருக்கிறார் விஜய். இதுக்காக கௌதம் மேனன் வருத்தப்பட்டிருக்கார் சார்.

நான் பக்கா லோக்கல் ஆளு. முழு டைரக்டர்ன்னு என்னைச் சொல்லிக்க மாட்டேன். இங்கிலிஷ் படம் இரான் படம்லாம் பார்க்க மாட்டேன். நான் எடுக்கிறது கொடுக்கிறது எல்லாமே அக்மார்க் உள்ளூர் லோக்கல் சரக்குதான். ‘இனிமேலாவது தமிழ் படம் எடுக்கட்டும்‘ங்கிற நல்ல எண்ணத்தில விஜய் என் பட டிவிடியைக் கொடுத்திருக்கிறார். உண்மையிலேயே இது எனக்குப் பெருமையான விஷயம். சொன்ன டயத்துக்குள்ளே படம் தயாரிப்பாளர் லாபம் பார்த்து சந்தோஷப்படணும் இதுதான் சார் என்னோட டார்க்கெட். நான் நல்லாயிருக்கேன்... தயாரிப்பாளர்கள் சந்தோஷமா இருக்காங்க... எனக்கு இது போதும். கை கூப்பி வழி அனுப்புகிறார் பேரரசு.

கௌதமுக்கு எப்படி இருந்திருக்கும்
ஒரு நல்ல எழுத்தாளரிடம் போய் " யோவ் என்னய்யா எழுதுற இந்த blog எல்லாம் வாசிச்சு எழுதக் கத்துக்கோ" என்று சொன்னது போலிருந்திருக்குமா




Related Posts with Thumbnails