செவ்வாய், 31 மார்ச், 2009

இலங்கையில் போர் நிறுத்தம் கருணாநிதி புளங்காகிதம்


போர் நிறுத்தத்திற்கு இலங்கை ஜனாதிபதி அழைப்பு
இன்று இலங்கை ஊடகங்களை அதிர வைத்துக் கொண்டிருக்கும் செய்தி இதுதான். மாவிலாறு அணைக்கட்டை விடுதலைப் புலிகள் மூடிய போது அதை மீட்க்கும் விதமாக ஆரம்பிக்கப்பட்ட போர் கிட்டத்தட்ட மூன்றாண்டுகளை கடந்து இறுதித் தருவாயை எட்டியிருக்கும் நிலையில் ஜனாதிபதி போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.

மேற்படி அழைப்பை சாதகமான முறையில் பரிசீலிப்பதாக விடுதலைப் புலிகளின் தலைமையும் அறிவித்துள்ளது மகிழ்வளிப்பதாய் உள்ளது.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி சமாதானத்தை ஏற்படுத்த பாடுபட்ட கட்சி என்ற வகையில் தாம் இதை வரவேற்பதாகவும் இருப்பினும் இறுதி நேரத்தில் படையினரின் மனவலிமையை தகர்க்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இம்முடிவு ஏலவே ஜனாதிபதி தேர்தலில் புலிகள் மகிந்தவை வெல்லச் செய்வதெற்கென தேர்தலை புறக்கணிக்கச் செய்ததற்கான கைம்மாறாகவே கொள்ள முடியும் எனவும் தெரிவுத்துள்ளது.

இதே நேரம் இடதுசாரி(?) கட்சியான மக்கள் விடுதலை முன்னணியும் பிக்குகளின் ஜாதிக ஹெல உறுமயவும் இதற்கெதிராக மக்களை அணி திரட்டி போராடவுள்ளதாக தெரிவித்துள்ளது.

e.p.d.p, t.m.v.p போன்ற தமிழ்க்கட்சிகள் கருத்து தெரிவித்திராத நிலையில் தமிழ்க்கூட்டமைப்பு இதை வரவேற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதே வேலை இது தான் இந்திய மத்திய அரசுக்கு கொடுத்த அழுத்தங்களினாலேயே சாத்தியமானதாக தமிழக முதல்வர் கலைஞர் தெரிவித்தார்.

இப்படியெல்லாம் எழுத ஆசைதான் ஆனால் பாவப்பட்ட தமிழர்களாக பிறந்தபின் என்ன செய்ய உண்மையில் இவ்வாறான ஒரு செய்தி கிடைக்கும் வரை அனைவரும் இப்படி எழுதிப் படித்து நம்மை நாமே ஏமாற்றி காதில் பூ சுத்திக் கொள்ள வேண்டியதுதான். அது வரை முன்கூட்டியே முட்டாள் தின வாழ்த்துக்கள்
BE COOL

1 கருத்து:

kuma36 சொன்னது…

ஆமா ஆமா காதுல பூ சுத்த வேண்டியது தான்

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails