வியாழன், 19 நவம்பர், 2009

காதலை அழகாய் சொல்வதெப்படி

வேலை வெட்டி இல்லாதவர்களுக்கு மிக இலகுவான வேலை காதல் செய்வதுதான் ஆனால் அதை தான் விரும்பும் எதிர்பாலாரிடம் சொல்வதென்பதுதான் கல்லில் நாருரிப்பதை விட கஷ்டமான வேலை.
என்னை கேட்டால் ஒரு பெண்ணிடம் Propose செய்ய தனியான பயிற்சிகளோ முயற்சிகளோ அனாவசியம். அங்கே உங்கள் மேல் கொஞ்சமேனும் Interest இருப்பின் நீங்கள் உளறிக் கொட்டினாலும் ஏற்றுக்கொள்ளப்படுவீர்கள் இல்லையென்றால் நீங்கள் தலை கீழாய் நின்றாலும் அவ்வளவுதான்.
அப்படியா அவர்களுக்கும் நம்மைப் பிடிக்க எப்படி இருக்கவேண்டும் எனக் கேட்காதீர்கள். அதற்கு என்னிடம் பதிலில்லை. தெரிந்தால் இப்படி இராப்பகலாக முழித்து பதிவு போட்டு உங்களை இம்சிக்காமற் குழந்தை குட்டி என settle ஆகி இருப்பேன்.

எனக்குக் கூட ஒரு எண்ணம் இருந்தது பெண்களின் மனதில் நுழைய கவிதை ஒரு நல்ல ஊடகமென. என் பதின்ம வயதுகளில் பாடசாலையிலும் ஆசிரியப் பயிற்சி பெறும் காலத்தில் கல்வியியற் கல்லூரியிலும் நண்பர்களுக்கு T.R பாணியில் எதுகை மோனைகளோடு நான் எழுதித் தரும் அடுத்தடுத்த வரிகளில் வரும் வசனங்களுக்கு எல்லாம் துண்டுகள்( பிகர் என்ற வார்த்தைக்கு இலங்கையில் புழங்கும் கலைச்சொல் என அறிக) மடங்கியதால் ஏற்பட்ட ஒரு miss concept. பின்னொரு நாளில் எனக்காக நான் எழுதிய வரிகள் நிராகரிக்கப் பட்ட போதுதான் புரிந்தது Success Formula கவிதையில் இல்லை கவிதை தரும் நபரில் இருக்கின்றதென.

நான் முதலிலேயே சொன்னது போல காதலை ஓரளவேனும் ருதுப் படுத்திக் கொண்டு சொல்வது நலம். தேவையற்ற வலிகளைக் குறைக்கும். ரொம்பவும் நீட்டி முழக்காமல் ஓரிரு வார்த்தைகளில் சொல்லி விடுங்கள். மணிக்கணக்காக இழுத்து உங்கள் சுயசரிதை,காதலிப்பதற்கான தன்னிலை விளக்கம், உங்களை காதலிப்பதால் கிடைக்கப் போகும் Benefits என்று ஒரு விற்பனை பிரதிநிதி ரேஞ்சில் அலட்டினால் ஒரு Salesman ஐ என்ன செய்வோமோ அதே கதிதான் உங்களுக்கும். Airtel விளம்பரத்தில் Sharuk சொல்கிறாரே வெறும் 5 அல்லது 10 சத செலவிலேயே கேட்டு விடுங்கள் என்று அதுதான் சரி. பர்சுக்கும் மனசுக்கும்.

இதுவரை சினிமாக்களில் வந்த காதலை வெளிப்படுத்தும் காட்சிகளை யோசித்துப் பார்த்தேன்.
பார்த்த அடுத்த சில நொடிகளிலே Train இல் கிட்டார் வாசித்து பாட்டு பாடி காதல் சொல்வது, காதலிக்க வில்லையென்றால் தலையில் கல்லைப் போட்டுக் கொல்லுவதாக சொல்லி காதல் வரப்பண்ணுவது எல்லாம் பார்க்க அழகாயிருந்தாலும் சுத்த சினிமாத்தனம். அடுத்து காதல் எல்லாம் இப்படி வருவதில்லை " அட உலகை ரசிக்க வேண்டும் நான் உன் போன்ற பெண்ணோடு" என்ற கணத்தில் பிரபுதேவாவுக்கும் கஜோலுக்கும் பற்றிக் கொள்ளுமே அப்படி வரவேண்டியது.



அட நல்லாயிருக்கே என எனக்கு தோன்றிய சிலக்காட்சிகள்

கஜினியில் சல சலவென பேசிக்கொண்டிருக்கும் அசினிடம் ரொம்ப Manly ஆக எவ்விதப் பதட்டமுமின்றி சூர்யா பஸ்ஸில் வைத்து I love you சொல்லலும் காட்சி.

மௌன ராகத்தில் கார்த்திக் ரேவதியிடம் மைக்கில் சொல்லும் காட்சி

ஒரு கௌரவமான தொழில் செய்யும் பெண் தன காதலை எப்படி வெளிப்படுத்தலாம் காக்க காக்கவில் ஜோ சூர்யாவிடம் காதல் சொல்லும் காட்சி நல்ல உதாரணம்

சலங்கை ஒலியில் கமல் ஜெயப்ப்ரதாவிடம் ஏகப்பட்ட பீடிகைகளோடு சொல்வாரே அந்த காதலுக்கு அது அழகு

வேட்டையாடு விளையாடுவில் பலத்த யோசனைக்குப் பின் சடாரென தவிர்க்கவியலாத ஒரு கணத்தில் ஏலவே திருமணமாகி விவாகரத்தாகி இருக்கும் ஜோவிடம் மனைவியை இழந்த கமல் காதலை சொல்லும் காட்சி.

7G Rainbow colony இல் அந்த இடைவேளைக்கு முந்திய காட்சி

(ன்னா மேல சொன்ன மாதிரி எல்லாம் Try பண்ண முதல் நாம கார்த்திக்,சூர்யா,கமல் ரேஞ்சில் இருக்குறோமான்னும் Think பண்ணுங்கன்னா இதெல்லாம் கேட்டு விட்டு போன நண்பனொருவன் மூடுபனியில் பிரதாப் போத்தன் ஷோபாவிடம் கேட்பாரே அது போல கேட்ட அவலமும் உண்டு.)

சில மாதங்களுக்கு முன் ஒரு ஹிந்தி படம் பார்த்தேன் Vinay pathak ( Rab Ne Bana Di Jodi இல் ஷாருக்கின் நண்பராய் வருவாரே) நடித்தது. சசியின் சொல்லாமலே போல சிரிக்க சிரிக்க ஒரு Sentimental Movie. Davidaniya படத்தின் பெயர் ரஷ்ய மொழியில் போய் வருகிறேன் என அர்த்தமாம். தன ஒரே தாயுடன் இலக்கில்லாது வாழ்ந்து நடுத்தர வயதை எட்டியவனுக்கு திடிரென தனக்கு Stomach cancer இருப்பது தெரிகிறது. இனியாவது தனக்காக வாழ முடிவெடுக்கும் அவன் இறப்பதற்குள் முடிக்க வேண்டிய பத்து விடயங்களை List போட்டு முடிக்கிறான். அதிலொன்று தனது பழைய தோழியை சந்தித்து சொல்ல முடியாமற் போன தன காதலை சொல்வது. ஏலவே திருமணம் ஆகி குழந்தையோடு இருப்பவளிடம் அவர் காதலை சொல்லும் காட்சி. நான் சொல்வதை விட இந்த படத்தை பார்த்திராதவர்கள் சிரமம் பாராது இந்த தொடுப்பில் போய் பாருங்களேன்.

4 கருத்துகள்:

Admin சொன்னது…

நிறையவே அனுபவம் இருக்கு போல

தர்ஷன் சொன்னது…

நன்றி சந்துரு
அனுபவம் ம்ம்ம் சினிமா பார்ப்பதில்தானே நிறைய இருக்கிறது

senthuran சொன்னது…

thanks

ஷஹி சொன்னது…

கண்கள் பனிக்காமல் காண முடியவில்லை விடியோ காட்சியை....நண்பர் ஒருவர் முன்னமே இந்த காட்சி பற்றி விளக்கமாகக் கூறக் கேட்டிருக்கிறேன்!உங்களுக்கு நல்ல ரசனை..

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails