
பதிவிட ஏதும் இல்லாததால் இது
குசும்பன் பாணியில் சொல்வதென்றால் Enter தட்டி தட்டி ஒரு கவிதை(?!)
உன் இதழ்களைத்தான் முத்தமிட
நினைத்தேன்
ஆனால் என் உதடுகள்
தினம் ஷ்பரிசிப்பதோ
சிகரட் பில்டரைத்தான்


ஒரு மூன்று வருடங்களுக்கு முன் ஆசிரியப்பயிற்சியை முடித்து விட்டு Appointment கிடைக்கும் வரை வீட்டில் இருந்த காலப்பகுதி. பொழுது போகாமல் பகல் நேரத்திலேயே MTV(இலங்கையின் தனியார் ஆங்கில Channel) யில் ஆங்கில தொடர்களைப் பார்த்துக் கொண்டிருப்பேன். அப்படிப் பார்த்ததுதான் Sunset beach. அதே தொடரில் ஏகப்பட்ட இளம்பெண்கள் இருந்தாலும் என்னைக் கவர்ந்ததென்னவோ கொஞ்சம் வயசான Lesley Ann down. அந்த கொஞ்சம் வயசு எவ்வளவு தெரியுமா? அதிகமில்லை. just 54 தன கணவனுக்குத் தெரியாமல் ஒரு வாலிபனுடன் காதல் வளர்க்கும் வேடம். அம்மணி அசத்தியிருப்பார். இப்போதெல்லாம் அவர் நடித்த தொடர்கள் ஏதும் போகின்றதா தெரியவில்லை. போனாலும் பார்க்க நேரமாயிருக்கின்றது.
வண்டுகளின் சிறகசைவினால் எழும் சிறு காற்றுக்கும் துவளும் மெல்லிடையாம் தமயந்திக்கு. ஒருவேளை இப்படி இருந்திருக்குமோ என யோசிக்கச் செய்தவர் இவர் ஷில்பா ஷெட்டி. Mr. Romeo தான் நான் பார்த்த இவரின் முதற் திரைப்படம். எப்பவோ நன்றாக வந்திருக்க வேண்டியவர் Big brother நிகழ்ச்சியினால் காலம் கடந்துதான் புகழ் இவருக்குக் கிடைத்தது. ம்ம் இப்போதும் பெருமூச்செறியச் செய்யும் அழகுக்கு சொந்தக்காரர். ராஜ் குந்த்ராவைப் பார்த்தால்தான் வயிற்றெரிச்சலாய்இருக்கிறது.
இவர் "ஜீசு படிகே மஸ்து மஸ்து " என ஆடிய ஆரம்பக் காலப்படங்களைப் பார்த்த போதெல்லாம் இவர் மீது எவ்வித ஈர்ப்பும் இல்லை. அப்படியே காலச்சக்கரம் உருண்டோடி சில வருடங்களின் பின் அமிதாப்புடன் நடித்த Aks நாகர்ஜுனாவுடன் நடித்த Agni varsha ஆகிய படங்களைப் பார்த்த போது மனம் "ரவீன ரவீனா" எனப் பாடத் தொடங்கியது. பழம் பழுக்க பழுக்கதான் அழகாயிருக்குமாம் இவரை பார்த்தப் போதுதான் அது புரிந்தது. இவரது வெகு சமீபமாய் வந்த படமொன்றைப் பார்த்தேன் ப்ச் பழம்ரொம்பவே பழுத்து விட்டது ரசிக்க முடியவில்லை.
எல்லோரையும் போல Doctor கனவுடன்தான் நானும் Advanced level ஐ ஆரம்பித்தேன். ஆனால் இன்று வெறும் ஆசிரியனாக ஆகிப் போனதில் பெரும்பங்கு இவருக்கு உண்டு. அவர் Shannon tweed. கண்டி,மாத்தளை அல்லது மலையகப் பகுதிகளை சேர்ந்தவர்கள் கட்டாயம் பேராதேனிய துசித்த படமாளிகையை பற்றியும் அங்கு போடப்படும் படங்களைப் பற்றியும் அறிந்திருப்பார்கள். கண்டியில் எனக்கு சனிக்கிழமை Biology மற்றும் Chemistry வகுப்புகளும் ஞாயிறன்று physics உம நடக்கும். பஸ்,சாப்பாட்டு செலவு போக மிச்சப்படுத்தும் காசை ஒரு மூன்று மாதம் சேர்த்தால் ஒரு படம் பார்ப்பதற்கான காசு ரெடி. அவ்வாறான நாட்களில் physics வகுப்பு முடிய Theater போய் பார்த்த படங்களில் பல இவர் நடித்தவை. Night Eyes,Women Scorned, Indecent Behavior இன்னும் பெயர் ஞாபகத்துக்கு வராத பல. சமீபமாய் கூட அப்படி அப்படி காட்சிகளற்ற அவர் Hulk Hogan உடன் நடித்தப் படம் ஒன்றை TV யில் பார்த்தேன். அவரது படம் பார்க்கும் பரவச அனுபவம் ம்ம் பார்த்தால்தான் தெரியும். Shannon tweed மட்டும் என் வாழ்வில் குறுக்கிடாமல் இருந்தால் நிச்சயம் Doctor ஆகி இருப்பேனோ என்னவோ.
இவரை நான் முதலில் பார்த்தது Ajnabee என்ற படத்தில். அதில் வில்லியாக வில்லன் அக்ஷய்குமாரின் மனைவியாக நடித்திருப்பார். அப்போது அவரை ரசிக்கத் தொடங்கியது அது அப்படியே Jism, Madoshi எனத் தொடர்ந்து No entry இல் அணில்கபூருடன் வரும் ஒரு பாடல் வரை தொடர்ந்தது. அசரடிக்கும் உயரம், அளவான உடலமைப்போடு கண்கொட்டாது பார்க்கச் செய்யும் கருப்பழகி அவர். Christiano Ronaldo வே கவிழ்ந்த பின் நாமெல்லாம் எம்மாத்திரம் ம்ம் John abraham க்குத்தான் கொடுத்து வைத்திருக்கிறது.
முதன் முதலில் இந்தியாவில் சரித்திர வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்ப்பார்ப்புகளை எல்லாம் ஏமாற்றி விட்டு Draw இல் முடிந்திருக்கிறது இந்தியாவிற்கெதிரான முதல் டெஸ்ட். பார்ப்போம் நாளைய கான்பூர் போட்டியில் என்ன செய்கிறார்கள் என்று
2003 உலகக் கிண்ணத்தோடு அரவிந்த ஒய்வு பெற்றப் போது இனி கிரிக்கெட் பார்ப்பேனா என்றே சந்தேகமாய் இருந்தது. அப்போதெல்லாம் இலங்கையில் உலகத்தரத்தில் மதிக்கக்கூடிய ஒரே துடுப்பாட்டவீரர் அரவிந்த மாத்திரமே என்ற எண்ணம் சற்று அழுத்தமாகவே இருந்தது. ஆனால் அதே two Down position இல் அரவிந்தவை மிஞ்சி சாதனைகள் செய்கிறார் மஹேல. (பதிவுகள் என்ன சொன்னாலும் அரவிந்தவை மிஞ்சியவராக என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்பது வேறு விடயம்.)
97 இல் சனத் முச்சதம் பெற்ற போட்டியிலே அறிமுகமான மஹேல அதிலேயே ரொம்பவும் risk எடுத்து பந்தை விக்கெட் வரை வரவிட்டு மிகத் தாமதித்து இலாவகமாய் அடித்த late cut களை பார்த்த போதே மிகுந்த தன்னம்பிக்கையானவராக தோன்றினார். அன்றிலுருந்து இன்று வரை அவர் வந்திருக்கும் பாதை நிச்சயம் மலைப்புக்குரியது. என்றாலும் மேற்கத்தேய ஊடகங்கள் இவரை விட சங்காவையே தூக்கிப் பிடிக்கும் மர்மம்தான் பிடிபடவில்லை. மஹேல இன்னும் கொஞ்சம் Fluent ஆக சங்கா போல English பேசிவிட்டால் சரி என நினைக்கிறேன்.
எல்லாமும் முடிந்த பின் எதைப் பற்றியோ பேச இலங்கையின் முக்கிய தமிழ் பேசும் அரசியற் கட்சி பிரதிநிதிகள் எல்லாம் சுவிஸின் ரைன் நதிக்கரையில் அமைந்திருக்கும் ஓரிடத்தில் கூடியுள்ளனர்.சிங்கள் பேரினவாதத்திற்கெதிரான வலுவான எதிர்த்தரப்பினை விமர்சித்தோ ஆதரித்தோ அதன் வாயிலாக பதவிகளைப் பெற்றோர் இன்றைய நிலையில் தமது பாராளுமன்ற கதிரைகளை எப்படித் தக்க வைப்பது என உரையாடுவார்கள் என்பதுதான் கசப்பானாலும் உண்மை. எப்படியோ பராசக்தி சிவாஜி சொல்வது போல அவர்கள் சுயநலத்தில் ஏதேனும் பொதுநலமும் கலந்திருந்தால் சந்தோஷம்.
ஒரு வழியாக இன்று ஐக்கிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களுடனான கூட்டத்தில் முதலில் ஜனாதிபதி தேர்தலை நடாத்தி முடிக்க தீர்மானித்துள்ளதாய் ஜனாதிபதி கூறியிருக்கிறார். ஆக பொதுத்தேர்தலா ஜனாதிபதித் தேர்தலா என்ற குழப்பத்தில் இருந்த எதிர்க்கட்சிகளுக்கு குழப்பம் தீர்ந்திருக்கும். இனி என்ன தேர்தல் முடியும் வரை பரஸ்பர தூற்றல்களை ஒரு மசாலா படம் பார்க்கும் மகிழ்வுடன் பார்த்து மகிழ வேண்டியதுதான்.
நான் முதலிலேயே சொன்னது போல காதலை ஓரளவேனும் ருதுப் படுத்திக் கொண்டு சொல்வது நலம். தேவையற்ற வலிகளைக் குறைக்கும். ரொம்பவும் நீட்டி முழக்காமல் ஓரிரு வார்த்தைகளில் சொல்லி விடுங்கள். மணிக்கணக்காக இழுத்து உங்கள் சுயசரிதை,காதலிப்பதற்கான தன்னிலை விளக்கம், உங்களை காதலிப்பதால் கிடைக்கப் போகும் Benefits என்று ஒரு விற்பனை பிரதிநிதி ரேஞ்சில் அலட்டினால் ஒரு Salesman ஐ என்ன செய்வோமோ அதே கதிதான் உங்களுக்கும். Airtel விளம்பரத்தில் Sharuk சொல்கிறாரே வெறும் 5 அல்லது 10 சத செலவிலேயே கேட்டு விடுங்கள் என்று அதுதான் சரி. பர்சுக்கும் மனசுக்கும்.
இதுவரை சினிமாக்களில் வந்த காதலை வெளிப்படுத்தும் காட்சிகளை யோசித்துப் பார்த்தேன்.
இயக்குனர் S.P. ஜனநாதன் தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர். உலகின் மிகச் சிறந்த காதல் கதை என அறியப்படும் Fyodor Dostoyevsky இன் White nights ஐ தழுவி இவர் இயக்கிய இயற்கை அந்த வருடத்திற்கான சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதைப்பெற்றது.
அடுத்து ஈ திரைப்படத்தில் அதுவரை எவரும் தொட்டிராத மூன்றாம் உலக நாடுகளை தமது உயிரியல் ஆயுதங்களை பரீட்சிக்கும் களமாக பயன்படுத்தும் வல்லரசுகளின் சதியையும் அதற்கு துணைபோகும் உள்நாட்டு பூர்ஷ்வாக்களைப பற்றியும் படமாக்கி இருந்தார். அதோடு இணைந்ததாக சேரி மக்களின் வாழ்க்கையும் கூடவே தீவிரவாதிகளாகவே அறியப்படும் நக்சல்களின் போராட்ட குணத்தையும் கூட காட்டி இருந்தார்.
தற்போது வெளியாகி நேரும் மறையுமான இருவகை விமர்சனங்களையும் எதிர்கொண்டு ஓடிக்கொண்டிருக்கும் ஜனாவின் புதிய படைப்புத்தான் பேராண்மை. வழமையாகவே தமிழ் சினிமாவில் காணப்படும் தர்க்கானுபூர்வமாய் ஏற்கவியலாத பல குறைபாடுகள் இந்த படத்திலும் உண்டு. எனினும் படம் ஆரம்பித்ததில் இருந்து இறுதி வரை ஒரு Encyclopedia போல சொல்லும் விடயங்கள் ஏராளம். முதற்பாதியில் சற்றே பிரச்சார தொனி எட்டிப் பார்த்தாலும் பிற்பாதி விறு விறுப்பாய் நகர்வது என்னவோ உண்மை.
படத்தில் வரும் பெண்கள் உயர் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் அதைக் காட்டுவதற்கோ என்னவோ அவர்கள் தமிழ் எழுதப் படிக்கத் தெரியாதவர்களாகவும் சகஜமாய் தமக்குள்ள A ரக பகிடிகளை பகிர்ந்து கொள்பவர்களாகவும் உள்ளனர். மாடு கன்று ஈன்றதும் சுற்றியிருந்து Happy Birthday to you பாடுவதை இளமைக்கே உரிய குறும்பு என ரசிக்க முடிந்தாலும் அதன் பின் சக தோழியின் உள்ளாடையை உருவுவது, மெதுவடை நல்லா இருக்குமாம் என சொல்லி சிரிப்பது, sir gear போடுங்க நீ போட்டுறாத என்பது, பாம்பு பார்க்கவில்லை என ஏங்குவது இதையெல்லாம் எதில் சேர்ப்பது எனத் தெரியவில்லை. ஒரே வார்த்தையில் சொல்வதாயிருந்தால் திருஷ்டி. அப்படிப் பட்ட பெண்களிடம் போய் ரவி உபரி மதிப்பு பற்றி பாடம் எடுக்கிறார். பொருளாதார அரசியல் கற்பதன் அவசியம் குறித்து சொல்கிறார்.
படத்தில் ஆயுதங்களை அனாயாசமாக பெண்கள் மற்றும் ஜெயம்ரவி கையாளுவது தொடர்பில் ஏற்க சங்கடங்கள் இருந்தாலும் படத்தின் வர்த்தக நோக்கம் கருதியதான அவ்வாறன காட்சிகளை ஜனநாதன் படத்தில் சொல்லிய மற்றைய கருத்துக்களுக்காக மன்னிக்கலாம் என நினைக்கிறேன். ஒன்றுமே செய்யாமல் இருப்பதை விட சினிமா முதலாளிகளை சமாளித்து அவர்கள் தேவையை பூர்த்தி செய்தவாறே தான் சொல்ல வந்த கருத்துக்களில் ஓரளவேனும் சொல்லியது சாதனையல்லவா. தணிக்கை குழு வெட்டியிராத வசனங்கள் இருந்திருப்பின் படம் இன்னும் வீரியமானதாக இருந்திருக்கும் என நினைக்கிறேன்.
"பா" ஹிந்தி திரைப்படத்தின் பாடல்கள் வெளிவந்துருக்கின்றன. இந்த மனுஷனுக்கு ஏன் இன்னும் ஹிந்தி திரையுலகில் சரியான break அமையவில்லை என அமிதாப் இளையராஜாவை சிலாகித்ததாய் அறிந்தேன். இளையராஜாவின் பின்னணி இசையின்றி படம் பார்த்த போது ஜீவனின்றி இருந்ததாம். அமிதாப்புக்கு இப்போதுதான் தெரிந்திருக்கிறது 1980 களில் இருந்தே தமிழர்கள் அறிந்து வைத்திருப்பது. ஏற்கனவே இதே பால்கியின் இயக்கத்தில் அமிதாப் நடித்து வெளிவந்த சீனிகம் படத்தில் குழலூதும் கண்ணனுக்கு, மன்றம் வந்த தென்றலுக்கு பாடல்களின் மெட்டை பயன்படுத்திய ராஜா இதிலே எனக்கும் ரொம்பவும் பிடித்த "சங்கத்தில் பாடாத கவிதை " பாடலின் மெட்டை பயன்படுத்தியிருக்கிறார். நான் கேப்டனின் காட்சிகளை பார்க்க பயந்து கேட்க மாத்திரமே செய்த பாடல்.
முதல் உயிரியின் தோற்றம் பற்றிய Oparin இன் உயிர் இரசாயனக் கூர்ப்புக் கொள்கையை stanley miller உம் Urey உம் ஆய்வு கூடத்தில் செய்த பரிசோதனையின் மூலம்( NH3, CH4, H2O, H2 வாயுக்களை கொண்ட வாயு அறையில் உயர் மின்னழுத்தம் மூலம் சக்தியை வழங்கி Amino acids,ribose வெல்லங்கள், Adenin போன்றவற்றை தொகுத்தது) 1950 களிலேயே உலகுக்கு காட்டி விட்டனர். இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்று Orgel வெகு அண்மையில் 6 அங்குல Nucleotide ஐயே தொகுத்து காட்டி விட்டார். so உங்கள் முதல் வாதம் அடிப்பட்டு போகிறது.
ஆக சந்ததிகளுக்கு இயல்புகள் கடத்தப்படுவது மரபணுக்களின் மூலமே மரபணுக்களில் ஏற்படும் மாறல்கள் மட்டுமே கடத்தப்படும் புறத்தோற்ற மாறல்கள் கடத்தப்படாது என சான்றுகளோடு கூறிய மெண்டல் டார்வின் கொள்கைக்கு வலு சேர்த்துள்ளாரா இல்லை அதை தகர்த்துள்ளாரா. அடுத்து மிகையாய் உற்பத்தியான அங்கிகளுக்கிடையே மாறல்கள் எவ்வாறு உருவாகின்றன என அவர் அறிந்திராத போதும் பின் வந்தவர்களால் விகாரம்(Mutation) பற்றிய கருத்துக்கள் கூறப்பட்டது.




